Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது பாசஞ்சர் வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் பாசஞ்சர் வாகனங்கள் மட்டுமல்லாது கமர்ஷியல் வாகனங்களின் விலையும் உயர்கிறது. 0.5-2.7 சதவீதம் வரை விலை உயர்த்தப்படுகிறது. அதாவது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.73 ஆயிரம் வரை விலை உயரவுள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலை எவ்வளவு மாறுபடுகிறது? என்ற துல்லியமான தகவல்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை. இந்த விலை உயர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை தேவைப்பட்டால், உங்களுக்கு அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப்களை நீங்கள் அணுகலாம்.
இந்த விலை உயர்வானது மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூவர் கூட்டணியான மராஸ்ஸோ (Marazzo), அல்டுராஸ் (Alturas) மற்றும் எக்ஸ்யூவி300 (XUV300) ஆகிய மாடல்களுக்கும் பொருந்தும். இந்த 3 மாடல்களின் விற்பனையும் மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நல்ல முறையில் தொடங்கியுள்ளது.
எம்பிவி ரக காரான மராஸ்ஸோ, எஸ்யூவி ரக கார்களான அல்டுராஸ் மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய 3 மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ காரானது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாதந்தோறும் 3,000 யூனிட்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.
அதே நேரத்தில் அல்டுராஸ் காரானது, மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். இருந்தபோதும் கூட கடந்த பிப்ரவரி மாதத்தில் 460 யூனிட் அல்டுராஸ் கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விலையின் அடிப்படையில் பார்த்தால் 460 என்பது ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கைதான்.
அதே சமயம் மற்றொரு மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி300, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 4,400 யூனிட்களுக்கும் மேற்பட்ட எக்ஸ்யூவி 300 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது மஹிந்திரா. இத்தனைக்கு பிப்ரவரி மாதத்தின் நடுவில்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சப் 4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களுக்கு பிறகு, அதிகம் விற்பனையாகும் மூன்றாவது மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உருவெடுத்துள்ளது. அத்துடன் தற்போது மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மாடல்களில் அதிகம் விற்பனையாகும் 2வது காராகவும் உயர்ந்து அசத்தியுள்ளது எக்ஸ்யூவி300.
மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை களத்தில் இறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த கார் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மஹிந்திரா நிறுவனத்திற்கு முன்னதாக டொயோட்டா, டாடா உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரெனால்ட் நிறுவனமும் தனது பிரபல மாடலான க்விட் காரின் விலையை உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது போதாத காலம் போல!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!