Just In
- 45 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாலை சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்-6 மாடல்... விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது எப்போது?
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பிஎஸ்-6 மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ளன. எனவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில், அனைத்து வாகன நிறுவனங்களும் தங்களின் மாடல்களை வேகமாக மேம்படுத்தி வருகின்றன. இதற்கு இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் பிஎஸ்-4 இன்ஜின்கள் ஆகும்.
இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. இந்த இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த இரண்டு இன்ஜின்களையும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி300 காரை மஹிந்திரா நிறுவனம் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இதன்படி சாலை சோதனையில் இருந்த பிஎஸ்-6 எக்ஸ்யூவி300 காரின் ஸ்பை படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதன் ப்யூயல் ஃபில்லர் கேப் மீது பிஎஸ்-6 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் இதில் பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜினா? அல்லது பிஎஸ்-6 டீசல் இன்ஜினா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் தோற்றத்தில் பிஎஸ்-4 மாடலை போன்றே பிஎஸ்-6 மாடலும் உள்ளது.
எனவே புதிதாக வரவுள்ள பிஎஸ்-6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த காரில் வழங்கப்படும் வசதிகளிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.
இந்த செக்மெண்ட்டில் அதிக வசதிகள் நிறைந்த கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 திகழ்கிறது. 7 ஏர் பேக்குகள், ரியர் டிஸ்க் பிரேக், ட்யூயல் ஜோன் ஏசி மற்றும் பல்வேறு ஸ்டியரிங் மோடுகள் என மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் ஏராளமான வசதிகள் நிறைந்துள்ளன. ஆனால் தற்போது உள்ள மாடலை காட்டிலும், பிஎஸ்-6 மாடலின் விலை அதிகமாக இருக்கும்.
பிஎஸ்-6 பெட்ரோல் எக்ஸ்யூவி300 காரின் விலை ரூ.20 ஆயிரம் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் பிஎஸ்-6 டீசல் எக்ஸ்யூவி300 மாடலின் விலை சுமார் 1 லட்சம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. வரும் 2020ம் ஆண்டின் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vikatan
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே