Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பவர்ஃபுல்லான புதிய டீசல் எஞ்சினுடன் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி!
சக்திவாயந்த புதிய டீசல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக, அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான எஞ்சின்களுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.
மேலும், தனது ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களில் புத்தம் புதிய டீசல் எஞ்சினை பயன்படுத்த இருக்கிறது மஹிந்திரா. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதனால், பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. இதுதவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் சோதனை செய்து வருகிறது. இந்த எஞ்சின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றங்களும் செய்து மேம்படுத்தப்படுகிறது.
மேலும், புதிய மாடலின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. பம்பர், ஹெட்லைட், க்ரில், பின்புற பம்பர் ஆகியவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். ஆக மொத்தத்தில் மிகச் சிறந்த அம்சங்களுடன் களத்தில் இறங்க இருக்கிறது.
புதிய மாற்றங்கள், பிஎஸ்-6 எஞ்சின்களுடன் விலையும் சற்று அதிகமாக இருக்கும். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் தொடர்ந்து போட்டி போடும். இது 7 சீட்டர் மாடலாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது.
Image Courtesy: Sarath Santham
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!