Just In
- 57 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டீசல் கார் உற்பத்தி குறித்து மீண்டும் விளக்கம் தெரிவித்த மாருதி!
பெரிய ரக டீசல் கார் உற்பத்தியை தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்தது. டீசல் கார்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், சிறிய ரக டீசல் கார்களின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தது.
அதேநேரத்தில், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையை தொடர இருப்பதாக தெரிவித்தன. இந்த நிலையில், டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவது குறித்து மாருதி கார் நிறுவனம் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி சஷாங்க் ஸ்ரீவத்சவா எக்கானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சிறிய வகை டீசல் கார்களை மட்டுமே நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். பெரிய வகை டீசல் கார்களை உற்பத்தி செய்வது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்படும் பெரிய வகை டீசல் கார்களுக்கு நிர்ணயிக்க வேண்டிய விலை மற்றும் அதற்கான வரவேற்பு குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விலக்கு அளிப்பதில் மாருதி உறுதியாக இருக்கிறது. ஆனால், அந்நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்துவது குறித்து தீவிர பரிசீலனையில் உள்ளது. எனினும், அதற்கான முதலீடும், அந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கான சந்தை வாய்ப்பும் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் கார்களை தொடர்ந்து மாருதி அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், டீசல் எஞ்சின் கார்களால் ஏற்படும் இழப்பை சரிகட்டுவதற்கு, சிஎன்ஜியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
எனவே, மாருதி ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ், எர்டிகா உள்ளிட்ட கார்கள் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் குறித்து இன்னமும் மாருதி முடிவு செய்யவில்லை என்றே தெரிகிறது.
Source: ET Auto
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!