Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விரைவில் புதிய டீசல் எஞ்சினுடன் வருகிறது மாருதி எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள்!
மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் கொடுக்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.
மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ் மற்றும் எர்டிகா உள்ளிட்ட பல கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதையடுத்து, இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை மேம்படுத்த ஃபியட் விரும்பவில்லை. எனவே, மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை உருவாக்கியது.
இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் முதலாவதாக சியாஸ் காரில் பொருத்தப்பட்டு நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் விரைவில் வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. அத்துடன், புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அத்துடன், சிறப்பான மைலேஜையும், குறைவான மாசு உமிழ்வு தன்மையையும் பெற்றிருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. பழைய 1.3 லிட்டர் டீசல் எஞ்சினைவிட சற்றே கூடுதல் செயல்திறன் கொண்டதாகவும் இருக்கிறது.
புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்படுவதால் மாருதி எர்டிகா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் விலை சற்று அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது மாருதி எர்டிகா கார் ரூ.7.44 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ் க்ராஸ் கார் ரூ.8.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.
மாருதி சியாஸ், எர்டிகா, எஸ் க்ராஸ் கார்கள் மட்டுமின்றி, விட்டாரா பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், டிசையர் கார்களிலும் இந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த எஞ்சின் ஆப்ஷன் பெரும்பாலான மாருதி கார்களில் இடம்பெற்றுவிடும்.