Just In
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 10 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சர்வீஸிற்கான இலவச சம்மர் கேம்ப்-ஐ அறிவித்த மாருதி சுஸுகி...!
மாருதி சுஸுகி நிறுவன் இந்த வருடத்திற்கான சம்மர் கேம்பினை தொடங்கியுள்ளது. இதில், வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சர்வீஸ் மற்றும் பாகங்கள் மாற்றித் தரப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் இந்தியா வாடிக்கையாளர்களுக்காக இலவச சம்மர் கேம்பை தொடங்கியுள்ளது. இந்த கேம்ப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ், செக்அப் மற்றும் சலுகை விலையில் உதிரிபாகங்கள் மாற்றுதல் உள்ளிட்ட சேவை மேற்கொள்ளப்பட உள்ளன.
மாருதி சுஸுகியின் இந்த கேம்ப் வருகின்ற 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வாகனம் குறித்த பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு, காரின் ஏசி, ஆயில், கூலண்டு, எலக்டிரிக்கல் வேலை மற்றும் டயர் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த சம்மர் கேம்ப் நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2,200 சர்வீஸ் மையங்களில் நடைபெற்று வருகின்றது. இதில், சர்வீஸுக்கு விடப்படும் கார்களை மாருதி சுஸுகியின் சர்வீஸ் டெக்னீசியன்கள், காரின் அனைத்து பாகங்களையும் முழுமையாக பரிசோதிக்கின்றனர். குறிப்பாக ஏசி உள்ளிட்ட சில பாகங்கள்மீது முக்கிய கவனம் செலுத்தி பார்வையிடுகின்றனர்.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் சர்வீஸ் துறையின் இயக்குநர் கூறியதாவது, "மாருதி சுஸுகி நிறுவனம் நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை சர்வீஸ் செய்து வருகிறது. இந்த சம்மர் கேம்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஏசி மற்றும் எலக்ட்ரிக் பிரச்னைகள் முழுமையாக தீர்க்கப்பட உள்ளன. எங்கள் வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத பயணத்தை அனுபவிக்கும் விதமாக இந்த சம்மர் சர்வீஸ் கேம்ப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் கேம்ப் மூலம், வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் இடையூறுகள் நீக்கப்படும் என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
இந்த சர்வீஸ் கேம்பினை மாருதி சுஸுகி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு, கடந்த வருடம் நடைபெற்ற இந்த கேம்பில் 2.2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சர்வீல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, நடப்பாண்டிற்கான சம்மர் சர்வீஸ் கேம்பினை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இது வருகின்ற 30ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
இதுதவிர்த்து, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் தயாரிப்புகளை புதுப்பிக்கப்பட்ட எஞ்ஜின்களுடன் அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு அண்மையில், அந்த நிறுவனத்தின் சியாஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்ட பலினோ காரை அறிமுகம் செய்யும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!