Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆட்டோ மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்... நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ...
ஆட்டோ மீது கார் மோதியதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டார். காண்பவர்கள் நெஞ்சை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த திக்... திக்... வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகன ஓட்டிகளும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். ஒரு வாகன ஓட்டி செய்யும் சிறிய தவறு கூட, சில சமயங்களில் மற்றவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றுவதே கிடையாது. இதன் காரணமாகதான் இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த சூழலில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், மாருதி சுஸுகி பலினோ கார் ஒன்று, அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லாததால், பலினோவின் டிரைவர், காரை வேகமாக செலுத்தினார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், திடீரென லேன் (Lane) மாறியது. அந்த ஆட்டோ, சாலையின் வலது பக்கத்தில் இருந்து திடீரென இடது பக்கம் நோக்கி வந்ததால், பலினோவின் டிரைவர் நிலைகுலைந்து போனார்.
ஆட்டோ லேன் மாறுவதை கவனித்த உடனேயே அவர் பிரேக்கை மிதிக்க தொடங்கி விட்டார். ஆனால் உரிய நேரத்தில், கார் நிற்கவில்லை. இதனால் ஆட்டோவின் பின் பகுதியில், பலினோ மிகவும் பயங்கரமாக மோதியது.
அதிவேகத்தில் வந்து மோதியதால், ஆட்டோவில் இருந்த வாலிபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அவர் காருக்கு முன்பு வந்து விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கார் நின்று விட்டது. இதனால் சிறு காயங்களுடன் அவர் தப்பி விட்டார்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதா? என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
மாருதி சுஸுகி பலினோவின் டேஷ் போர்டு கேமராவில், விபத்து நடைபெற்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை Viratian வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு இந்த விபத்து ஓர் உதாரணம் மட்டுமே. இங்கே சில வாகன ஓட்டிகள் ஸ்பீட் லிமிட்டை கடைபிடிக்க மாட்டார்கள். எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீர் திடீரென லேன் மாறுவார்கள்.
இதுபோன்ற காரணங்களால்தான் இங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், விபத்து நடைபெற்ற இடத்திற்கு முன்பாக க்ராஸிங் ஒன்றை வீடியோவில் காண முடிகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, இத்தகைய க்ராஸிங்குகள் வந்தால் உடனடியாக வேகத்தை குறைத்து விடுவது நல்லது. குறிப்பாக அந்த சாலை கிராமங்கள் வழியாகவோ அல்லது மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்கள் வழியாகவோ சென்றால், உடனே வேகத்தை குறைத்து விடுங்கள்.
இத்தகைய ஆட்டோ ரிக்ஸாக்கள் எப்போதும் பயணிகளால் நிரம்பி வழியும் மற்றும் அவற்றின் பிரேக்கிங் பவர் ஜீரோவாகவே இருக்கும். அத்துடன் பெரும்பாலான ஆட்டோ ரிக்ஸா டிரைவர்கள் ரியர் வியூ மிரர்களையும் பயன்படுத்துவது கிடையாது.
எனவே சாலைகளில் இத்தகைய வாகனங்களை ஓவர் டேக் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பதும் சிறந்தது. தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வரும் சூழலில், நெட்டின்சன் மற்றொரு கருத்தையும் முன்வைக்கின்றனர்.
இந்த விபத்தில் மாருதி சுஸுகி பலினோவின் முன்பகுதி நொறுங்கி விட்டது. ஆனால் ஆட்டோ சற்று மட்டுமே டெண்ட் ஆகியுள்ளது. அதாவது சிறிய அளவிலான சேதாரங்களுடன் தப்பி விட்டது. எனவே மாருதி சுஸுகியின் கட்டுமான தரத்தை (Build Quality) நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதே சமயம் இந்த விலைக்கு மாருதி சுஸுகி பலினோ தரமான கார்தான். தங்கத்தின் விலையில் வைரத்தை எதிர்பார்த்தால் எப்படி? என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா