Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பேசாம கார் விலைய குறைச்சுடுவோமா... மாருதி பரிசீலனை!
கார் விலையை குறைப்பது குறித்து மாருதி நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த 10 மாதங்களாக மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை சரிவு முகத்திலேயே உள்ளது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளையும் அந்நிறுவனம் அறிவித்து வருகிறது.
பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் விற்பனை அதிகரிக்கும் என்ற பெரும் நம்பிக்கையில் மாருதி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் இருந்து வருகின்றன. கார் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கார்ப்பரேட் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இதன் தாக்கம் காரணமாக, கார் நிறுவனங்களுன் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதையடுத்து, கார்களின் விலையை குறைக்கலாமா என்று மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இதனை அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்சி.பர்கவா தெரிவித்துள்ளார். கார் விற்பனையை அதிகரிக்க விலையை குறைப்பது ஒரு தீர்வாக அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக பர்கவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
அதேநேரத்தில், ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக, கார் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அதிகபட்ச சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளன.
கார்ப்பரேட் வரி குறைப்பால் கார் நிறுவனங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும், ஆனால், அது கார் விலையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமற்றது என்று டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறி இருக்கிறார்.
கார்ப்பரேட் வரி குறைப்பால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அதிக முதலீடுகளை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சமூக நல திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கார்களுக்கு வழங்கப்படும் சேமிப்புச் சலுகைகளை போதுமான என்று ஹோண்டா கார் நிறுவனம் கருதுகிறது. விலை குறைப்பு என்பது தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனமும் இதே கருத்தை கொண்டுள்ளது. எனினும், பண்டிகை காலத்தில் சிறப்பு சலுகைகள் காரணமாக கார் விற்பனையில் உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.