Just In
- 22 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 33 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அதிரடியாக விலையை குறைத்த மாருதி சுஸுகி: கடும் அதிர்ச்சியில் போட்டி நிறுவனங்கள்!
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையைக் கணிசமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையினால் போட்டி நிறவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையைக் கணிசமாக குறைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக நிலவி வரும் மந்த நிலை மற்றும் வரவிருக்கும் விழாக் காலங்களை சிறப்பிக்கும் விதமாக விலை குறைப்பு நடவடிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பொதுவாக இந்தியர்கள் விழாக் காலங்களில் புதிய பொருட்களை வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆகையால், சிறப்பு சலுகைமூலம் வரும் பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களைக் கவரும் விதமாக, குறிப்பிட்ட மாடல்களின் விலையில் இருந்து ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், மத்திய நிதியமைச்சர் பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததன் பேரில் இந்த தரமான சம்பவத்தை மாருதி செய்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை கணிசமாக குறைக்கும் விதமாக, மத்திய அரசு இந்த வரி குறைப்பினைச் செய்துள்ளது. ஆகையால், தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் சற்று தளர்வு காண வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக, கடந்த இரு நாட்களாக பரீசிலிக்கப்பட்டு வந்த விலை குறைப்பு நடவடிக்கை, செப்டம்பர் 25 (இன்று) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
அந்தவகையில், மாருதியின் பிரபல மாடல்களான ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசையர் டீசல், டூர் எஸ் டீசல், விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய மாடல் கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம், "விலைக் குறைப்பானது, முன்னதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையுடன் சேர்ந்தே பொதுமக்களுக்கு கிடைக்கும். இது, ஆரம்பநிலை வாடிக்கையாளர்களை மிகப் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பண்டிகைக் காலங்களில் புதிய வாகனங்களை மலிவான விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலனளிக்கும்" என தெரிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!