Just In
- 38 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஓலா, ஊபர் காரணமா... நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த மாருதி சுஸுகி!
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் ஜாம்பவான வாகன உற்பத்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்திய ஆட்டோமொபைல்துறை நடப்பு ஆண்டு தொடங்கிய முதல் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் விற்பனை வீழ்ச்சி மற்றும் நிதியிழைப்பைச் சந்தித்து வருகின்றது.
இந்திய வாகனத்துறையின் இத்தகைய நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தவகையில் பண மதிப்பிழப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது, "ஓலா மற்றும் ஊபர் ஆகியவற்றின் அதிக புழக்கத்தின் காரணமாக இந்திய வாகனத்துறை மந்த நிலையைச் சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், இளைஞர்கள் இஎம்ஐ செலுத்தி வாகனத்தை வாங்குவதற்கு பதிலாக பொதுவாகனங்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவும் இத்தகைய சூழல் நிலவி வருகின்றது என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆகையால், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் இந்திய இயக்குநர் சஷாங் ஸ்ரீவஸ்தா பதிலளித்துள்ளார்.
அதில், "ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மந்த நிலை இந்தியாவில் நிலவவில்லை. அதேசமயம், தற்போதைய விற்பனைச் சரிவு கடந்த 2018ம் ஆண்டு இறுதியின்போதே தொடங்கியது. இதன் வீரியம் நடப்பு ஆண்டு முதலே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஓலா மற்றும் ஊபர் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது, பெரும்பாலான இளைஞர்கள் அதில் இணைந்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். எனவே, அப்போது இந்திய வாகனத்துறை நல்ல வளர்ச்சியை அடைந்தது" என தெரிவித்தார்.
தொடர்ந்து ஓலா, ஊபர் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய இந்தியா வாகனத்துறையின் மந்தமான நிலைக்கு காரணம் என்று முழுமையாக கூறிவிட முடியாது. இதனை நாம் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதன்காரணமாக, தற்காலிக பணியாளர்களை வெளியேற்றுதல், உற்பத்தியைக் குறைத்தல் உள்ளிட்ட பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!