Just In
- 8 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 55 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி!
எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான காரணம் குறித்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் ஒரு வழியாக தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.
ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வரும் மாதங்களில் எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, நிஸான் லீஃப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த ரேஸில் உள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான வேகன் ஆர் எலெக்ட்ரிக், வரும் 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 50 யூனிட்களுடன் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா இந்த முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளார்.
புத்தம் புதிய வேகன் ஆர் கார் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-பெட்ரோல் என இரட்டை எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. அத்துடன் வரும் மாதங்களில், வேகன் ஆர் காரின் எல்பிஜி வேரியண்ட்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு டிமாண்ட் எப்படி இருக்கும் என திட்டமிட்டுள்ளீர்கள்? என்ற கேள்விக்கு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா, சிஎன்பிசி டிவி18-யிடம் பின்வருமாறு கூறினார். ''2020ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வோம்.
தற்போது எங்களிடம் அத்தகைய 50 வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறான நிலப்பரப்புகளில் அவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் பேட்டரியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
காரின் விலையில் 50-60 சதவீதம் பேட்டரிக்கே சென்று விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே டிமாண்ட் எப்படி இருக்கும்? என்பது அவ்வளவு உறுதியாக தெரியவில்லை. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது பேட்டரி விலை அதிகமாக இருப்பதால், 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்தாலும் கூட இருக்கலாம். மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 150 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
எனவே இது நகர பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். நகரங்களில் கார்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் கேப் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த ரேஞ்ச் போதுமானதுதான். காரை சார்ஜ் செய்வதற்கு இவர்களுக்கு போதுமான அவகாசம் இருக்கும். ஆனால் தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பது ரேஞ்ச்தான்.
எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக ஒரு சார்ஜிற்கு 250-300 கிலோ மீட்டர்கள் ரேஞ்சை வழங்கினால் மட்டுமே தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்களால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும். இதனிடையே இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த எண்ணிக்கை வெகு விரைவில் 3,000 ஆக உயர்த்தப்படும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு, எலெக்ட்ரிக் வாகன கடனுக்கான வட்டிக்கு வருமான வரி சலுகை என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். எனவே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.