Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 3 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 5 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 6 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....
மாருதி சுசுகி நிறுவனம் தனது தயாரிப்புகளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்காக பனிகாலத்திற்கான சர்வீஸ் கேம்ப்பை சமீபத்தில் ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் வரையில் நடைபெற இருக்கும் இந்த கேம்ப் கிறித்துமஸ் விடுமுறைக்கு முன்பாக நிறைவடையும் என இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 20ஆம் தேதி வரை மாருதி சுசுகி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ள இந்த சர்வீஸ் கேம்பில் அதிக தள்ளுபடி மற்றும் குறைவான பணியாளர் செலவில் வாகனங்களின் 27 பாயிண்ட் சரிபார்ப்பு, ட்ரை வாஷ்/ டாப் வாஷ் உள்ளிட்டவை செய்து தரப்பட்டு வருகிறது.
இதுமட்டுமில்லாமல் காரின் பாகங்களும் தள்ளுபடி மற்றும் சலுகையுடன் இந்த கேம்பில் விற்கப்படுகிறது. தற்சமயம் இந்த சர்வீஸ் கேம்ப்பை இந்தியா முழுவதும் தனது சர்வீஸ் சென்டர்களில் நடத்தி வரும் மாருதி சுசுகி நிறுவனம், இந்த கேம்ப்பை கடந்த 11ஆம் தேதி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
எங்களது வாடிக்கையாளர்கள் வாகனத்தில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி இந்த பனிக்காலத்தையும் விரைவில் வர போகின்ற கிறித்துமஸ் விடுமுறையையும் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் சலுகை மற்றும் தள்ளுபடிகளுடன் இந்த சர்வீஸ் கேம்ப் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாருதி சுசுகி நிறுவனம் கூறுகிறது.
இவர்களது இந்த கூற்றும் ஏற்கும்படியாக தான் உள்ளது. ஏனெனில் மற்ற நேரங்களில் கார் ப்ரேக்-டவுன் ஆகி சாலையில் நின்றாலே கோபம் தலைக்கேறிவிடும். பனிக்காலத்தில் சொல்லவா வேண்டும். இதனால் தான் இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியினை தெரிவித்து வருகிறது.
இந்த சர்வீஸ் கேம்பின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களின் பாகங்களின் நிலையை எந்தவொரு செலவும் இன்றி பரிசோதித்து தெரிந்து கொள்ளவும் முடியும். இந்த சர்வீஸ் கேம்ப் அறிவிப்பு ஒருபுறம் இருக்க, மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து என்சிஏபி (நியூ கார் அஸஸ்மெண்ட் புரோகிராம்) அமைப்பிற்கு பாதுகாப்பு சான்றிதழிற்காக அனுப்பப்பட்ட மாருதி எர்டிகா கார் மூன்று ஸ்டாரை பெற்றுள்ளது.
இந்த அமைப்பு எர்டிகாவின் ட்யூல் காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, சீட் பெல்ட் அலாரம், ஓட்டுனருக்கென ப்ரேத்யகமாக கொடுக்கப்படும் சீட் பெல்ட், பயணிகளுக்கான பக்கவாட்டு காற்றுப்பைகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ்ஜஸ் போன்ற அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் சரிபார்த்து விட்டு இந்த மூன்று ஸ்டார் மதிப்பை வழங்கியுள்ளது.
ஐந்து-கதவு, ஏழு-இருக்கைக்கான எம்பிவி வகையில் இடம்பெற்றுள்ள மாருதி எர்டிகா மாடல் கார் க்ராஷ் சோதனையில் 1,363 கிலோகிராம் எடை (டம்மிகளையும் சேர்த்து) கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 64kmph வேகத்தில் எர்டிகா கார் இந்த க்ராஷ் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி கார்களின் உரிமையாளர்களுக்கு மாருதியின் இந்த அறிவிப்பு நிச்சயம் இன்ப செய்தி தான். இதுமட்டுமில்லாமல் இந்த அறிவிப்பு மற்ற வாடிக்கையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தால் இனிவரும் மாதங்களில் மாருதி கார்களின் விற்பனையில் மாற்றத்தை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!