Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கான புதிய எஞ்சின் வாய்ப்புகள்!
டீசல் கார் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக மாருதி அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உயிர் பிழைக்க இருக்கும் வாய்ப்புகளை இந்த செய்தியில் காணலாம்.
மாருதி நிறுவனத்தின் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 12,000 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகின்றன. கடந்த மாதம் கூட 14,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகின.
எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1 இடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில், அடுத்த ஆண்டு முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது.
தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால், இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்தப்போவதில்லை என்று ஃபியட் அறிவித்தது. இதையடுத்து, தனது கார்களுக்கு புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை உருவாக்கி பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது. எனினும், டீசல் கார் உற்பத்தியை அடுத்த ஆண்டு முற்றிலுமாக நிறுத்தப் போவதாக மாருதி அறிவித்துள்ள நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் புதிய எஞ்சின் ஆப்ஷன்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் பயன்படுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் விட்டாரா பிரெஸ்ஸாவில் இடம்பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும். இதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மைலேஜ் மிகச் சிறப்பானதாக இருக்கும். அதாவது, டீசல் மாடலுக்கு இணையான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் காலக்கட்டத்தில் பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இதுதவிர்த்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இந்த எஞ்சினை பயன்படுத்துவதை மாருதி தவிர்க்க முடிவு செய்துள்ளது. மற்றொரு ஆப்ஷன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கைவசம் இருக்கிறது.
மாருதி சியாஸ் காரில் பயன்படுத்தப்படும் இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் எர்டிகா காரிலும் வர இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு முதல் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது என்று மாருதி தெரிவித்துள்ளது.
எனினும், வரவேற்பை பொறுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனை வழங்குவது குறித்து மாருதி முடிவு எடுக்கும். எனவே, இந்த டீசல் எஞ்சினை எதிர்காலத்தில் தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.