Just In
- 20 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 34 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பிரபல ஹாலிவுட் நடிகர் நியமனம்
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அடுத்து தயாரிப்பு வாகனமான எலக்ட்ரிக் இ-இசட்எஸ் எஸ்யூவி மாடலுக்கு பிரபல பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் இந்திய பிராண்ட் தூதராக இருப்பார் என அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே எம்ஜி ஹெக்டரின் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள இந்த எலக்ட்ரிக் மாடல் கார் இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவிக்கு பிறகு எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் இரண்டாவது காராக விளங்கும். இந்த இ-இசட்எஸ் மாடல் காருக்கு ஏற்கனவே பல முன்திட்ட பணிகள் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களிடையே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டது குறித்து பெனடிக்ட் கம்பெர்பாட்ச் கூறுகையில், எனது குழந்தை பருவத்தில் இருந்தே எம்ஜி நிறுவனத்தை பற்றி படித்தும் பார்த்தும் வருகிறேன். எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் காரில் பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன்.
தற்போது அந்நிறுவனத்தின் இந்திய முதலீட்டில் நான் ஒரு பகுதியாக உள்ளேன். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் உடன் இணைக்கப்பட்ட எஸ்யூவியாக விளங்கவுள்ள இந்த இசட்எஸ் இவி கார், தற்சமயம் சுற்றுச்சூழலுக்கு தேவையான மாற்றமாக உள்ளது. இதன் இந்திய அறிமுகத்தில் நானும் ஒரு பகுதி என்றார்.
எம்ஜி மோட்டார் இந்தியாவின் எம்டி ராஜீவ் சாபா கூறுகையில், எம்ஜி இசட்எஸ் இவி கார் மூலம் எங்கள் நிறுவனத்தை பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடிகர் உடன் இணைக்க ஆர்வமாக உள்ளோம். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் மிக பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. இதுவே இந்தியாவில் இந்த காரை எளிதாக விற்பனை செய்ய வழி வகுக்கும் என நம்புகிறோம்.
இந்த கார் மூலம் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு நாங்களும் ஒரு காரணமாக அமையவுள்ளோம். இதனால் மகிழ்ச்சியுடன் இந்த காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார். எம்ஜி நிறுவனம் மேலும் எம்ஜி சேன்ஞ்மேக்கர்ஸ் மற்றும் ட்ராக்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள 200 பள்ளிகளில் நடத்தி வருகிறது.
இந்த இ-இசட்எஸ் எஸ்யூவி கார் 44.5 கிலோ வாட்ஸ்/ நேரம் பேட்டரி யூனிட்டை கொண்டுள்ளது. இந்த காரின் மோட்டார் 150 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி 0-விலிருந்து 60 கிலோமீட்டர்/நேரம் வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் கொடுக்கக்கூடியது. இந்த அளவுகளில் தான் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த எலக்ட்ரிக் இசட்எஸ் காருடன் இசட்எஸ் எஸ்யூவி மாடலையும் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகவுள்ள இந்த எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஹைப்ரீடு பவர்ட்ரைன் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.
எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி கார் பெரும் தொகையில் பல சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் தான் பிரிட்டிஷ் நடிகர் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலானோர் சாதாரண கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் வருங்காலங்களில் பாதுகாக்கப்படும் என்பதால் அரசாங்கமும் தனது பணியாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.