Just In
- 13 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 42 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எம்ஜி ஹெக்டர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும்? - புதிய தகவல்கள்!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதியை பெற்ற கார் என்ற பெருமையுடன் வசீகரமான டிசைனில் வந்தது. மேலும், யாரும் எதிர்பாராத விதமாக மிக சவாலான ஆரம்ப விலையிலும் களமிறக்கப்பட்டது.
இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை இந்தியர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். எம்ஜி மோட்டார் நிறுவனமே எதிர்பாராத அளவுக்கு முன்பதிவு குவிந்தது. கிட்டத்தட்ட 28,000 பேர் முன்பதிவு செய்த நிலையில், ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை திடீரென நிறுத்தியது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
மாதத்திற்கு 2,000 கார்கள் மட்டுமே என்ற உற்பத்தி இலக்குடன் வர்த்தகத்தை துவங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதான் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக இறங்கியுள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி மோட்டார் அதிகாரி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில்,"ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை. முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஹெக்டர் உற்பத்தியை அதிகரிக்கும்போது மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் உள்ளது. எனது கூற்றுப்படி, அடுத்த மாதம் முன்பதிவு மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஹெக்டரை முன்பதிவு செய்வதற்கான தவம் கிடக்கும் வாடிக்கையாளர்களுக்காக மாற்றுத் திட்டம் ஒன்றை எம்ஜி மோட்டார் செயல்படுத்தி உள்ளது. இதன்படி, ஹெக்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்ய விரும்புவோரை காத்திருப்போர் பட்டியலில் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார்.
ஆனால், முன்பணம் எதுவும் இல்லாமல், பெயர் விபரம் மட்டும் பெற்றுக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு திறக்கப்படும்போது, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார். தற்போது 16,000 பேர் இதுபோன்ற காத்திருப்போர் பட்டியலில் பெயர் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால், பலர் அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இதனால், தகுதியுடைய வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாமல், காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. இந்த சாதனம் நேரடி இணைய வசதியையும் அளிக்கிறது.
ரூ.12.18 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் மிகச் சிறப்பான இடவசதியுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக்கிங் செய்து வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்