Just In
- 19 min ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 1 hr ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 2 hrs ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 4 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
Don't Miss!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என உறுதி அளித்திருந்த பிரதமர் மோடி, தற்போது ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கியமான எரிபொருட்களின் மூலப்பொருள். ஆனால் இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
எனவே ஈரான், ஈராக், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக மிக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் தற்போது காற்று மாசுபாடு என்ற பிரச்னையில் சிக்கி தத்தளித்து கொண்டுள்ளன. இதன் காரணமாகவும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆட்சி செய்ய போகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது ஒரு பெரும் குறையாக கருதப்படுகிறது.
இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு காரணம் விலைதான். உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை எடுத்து கொள்ளலாம். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களின் விலை 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகம்.
இதன் காரணமாகதான் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சொல்லிக்கொள்ளும்படி பிரபலம் அடையவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் நீங்கள் எலெக்ட்ரிக் கார் வாங்கினால், 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகும். இதுதவிர எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக எளிதாக லோன் கிடைப்பதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களுக்கான லோன்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையும் என மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை அதிகரிக்கும்.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை அதிகமாக இருப்பதால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலையும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே நிலைக்கு வந்து விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க தொடங்குவார்கள்'' என்றார்.
இத்திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் காரின் மாடல் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் அளவு ஆகியவற்றை பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என தெரிகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படலாம்.
இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களால், கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும். தற்போதைய நிலையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்போது ஆலோசித்து கொண்டுள்ள திட்டம் அமலுக்கு வந்தவுடன், இது நாடு முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இன்னும் சில முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைத்திருப்பது இதில் முக்கியமானது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மேலும் குறைய இந்த நடவடிக்கை உதவும்.
மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது இந்த நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கிடைக்கிறதே என மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்.
Note: Images Are For Representational Purposes Only
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!