Just In
- 56 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரூ.15 லட்சம் அல்ல... ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என உறுதி அளித்திருந்த பிரதமர் மோடி, தற்போது ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கியமான எரிபொருட்களின் மூலப்பொருள். ஆனால் இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
எனவே ஈரான், ஈராக், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.
இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக மிக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் தற்போது காற்று மாசுபாடு என்ற பிரச்னையில் சிக்கி தத்தளித்து கொண்டுள்ளன. இதன் காரணமாகவும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆட்சி செய்ய போகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பது ஒரு பெரும் குறையாக கருதப்படுகிறது.
இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையாமல் இருப்பதற்கு காரணம் விலைதான். உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை எடுத்து கொள்ளலாம். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை காட்டிலும் எலெக்ட்ரிக் கார்களின் விலை 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகம்.
இதன் காரணமாகதான் இந்தியாவில் இன்னும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சொல்லிக்கொள்ளும்படி பிரபலம் அடையவில்லை. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் நீங்கள் எலெக்ட்ரிக் கார் வாங்கினால், 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகும். இதுதவிர எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக எளிதாக லோன் கிடைப்பதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களுக்கான லோன்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையும் என மத்திய அரசு கருதுகிறது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை அதிகரிக்கும்.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை விட விலை அதிகமாக இருப்பதால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலையும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே நிலைக்கு வந்து விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க தொடங்குவார்கள்'' என்றார்.
இத்திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் காரின் மாடல் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் அளவு ஆகியவற்றை பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என தெரிகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படலாம்.
இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களால், கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும். தற்போதைய நிலையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்போது ஆலோசித்து கொண்டுள்ள திட்டம் அமலுக்கு வந்தவுடன், இது நாடு முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக இன்னும் சில முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு சில எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைத்திருப்பது இதில் முக்கியமானது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மேலும் குறைய இந்த நடவடிக்கை உதவும்.
மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது இந்த நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கிடைக்கிறதே என மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்.
Note: Images Are For Representational Purposes Only
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!