Just In
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 11 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திடீரென உள்ளே புகுந்து ரெய்டு நடத்திய அதிகாரிகள்... நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்...
நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த ரெய்டு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image For Representational Purposes Only
சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் கேரவன் (Caravan) பயன்படுத்துவது வழக்கம். இது வேனிட்டி வேன் (Vanity Van) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது அளவில் மிகப்பெரியதாக இருக்கும். அத்துடன் படுக்கை, ஏசி என பல்வேறு சொகுசு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
சினிமா படப்பிடிப்புகளுக்கு தயார் ஆகவும், உணவு அருந்தவும், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தை சொகுசாக கழிக்கவும், வேனிட்டி வேன்களை திரையுலக நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலம்சேரி என்ற பகுதியில், சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அம்மாநிலத்தின் மோட்டார் வாகன துறையை (Motor Vehicles Department-MVD) சேர்ந்த அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்குள் திடீரென நுழைந்தனர்.
பின்னர் அங்கு இருந்த 3 வேனிட்டி வேன்களை அவர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மலையாள சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில்தான், இந்த ரெய்டு திடீரென நடத்தப்பட்டது.
இது நடிகை நயன்தாரா மற்றும் நடிகர்கள் நிவின் பாலி, தயன் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்காக வாங்கப்பட்டது ஆகும். ஆனால் இது அவர்களுக்கு சொந்தமானது கிடையாது என கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பை முன்னிட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 3 வேனிட்டி வேன்களில் ஒன்று மட்டும் மிக பிரம்மாண்டமான முறையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு இருந்தது. இது 19 இருக்கைகளை கொண்டது ஆகும். வரி செலுத்தவில்லை என்ற காரணத்தால்தான் 3 வேனிட்டி வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் அபராதம் செலுத்தி, உரிய நடைமுறைகளை முடித்த பின்பு 3 வேனிட்டி வேன்களும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டன. இதில், பிரம்மாண்டமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்த 19 சீட்டர் வேனிட்டி வேனுக்கு மட்டும் 1.50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எஞ்சிய 2 வேனிட்டி வேன்களுக்கும் சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் 3 வேனிட்டி வேன்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 19 சீட்டர் வேனிட்டி வேன் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எஞ்சிய 2 வேனிட்டி வேன்களும் தமிழ்நாடு பதிவு எண் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. வரி செலுத்தாமல் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகை பொறுத்தவரை ஒரு சிலர்தான் சொந்தமாக வேனிட்டி வேன்களை வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் வேனிட்டி வேன்களை வாடகைக்கு எடுத்துதான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் வரி செலுத்தாத வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சமே திரையுலகினரின் கவலைக்கு காரணம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
இதன்மூலம் சட்ட விரோத நடவடிக்கைகள் கட்டுக்குள் வரும் என்பதுடன், அரசுக்கு வரி வருவாய் அதிகமாகும் என்பதே இதற்கு காரணம். எனவே இத்தகையை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு