Just In
- 16 min ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 36 min ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 2 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
Don't Miss!
- Movies சீரியலை விட்டு விலகிய ராதிகா..! பேத்தி ஸ்கூலில் சொன்ன கதை? சரத்குமார் ரியாக்ஷனை பாருங்க!
- News வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.. மனோ தங்கராஜ்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
உலகமே வியப்பு! எலெக்ட்ரிக் காரை வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி வெறும் 10 நிமிடம் சார்ஜ் ஏற்றுவதன் மூலம் எவ்வளவு கிமீ பயணிக்க முடியும்? என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி.
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. மின்சார வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்கும் முயற்சிகளை பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் மிக தீவிரமாக செய்து வருகின்றன.
மின்சார வாகனங்கள் மூலம் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்தால், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறையும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது மின்சார வாகனங்களின் தனி சிறப்பாக உள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று அதிகமாக மாசுபடுகிறது. உலகின் காற்று மாசுபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை முக்கியமான காரணமாக உள்ளது.
இதுபோன்ற காரணங்களால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை கைவிட்டு விட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம்) குறைவாக இருப்பது மிகவும் முக்கியமானது.
இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஏற பல மணி நேரம் எடுத்து கொள்வதும், பின்னடைவாக உள்ளது. இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால், ஒரு சில நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் தயங்குகின்றனர்.
ஆனால் இந்த பிரச்னைக்கு தற்போது ஆராய்ச்சியாளர்கள் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். அதிக ரேஞ்ச் தரும் வகையில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சிகளும், வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான தொழில்நுட்பங்களை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஃபாஸ்ட்-சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் படி எலெக்ட்ரிக் கார் பேட்டரியை, 360 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில், வெறும் பத்தே நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அனைத்து மின்சார வாகனங்களிலும் நிலவி கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னைக்கு இது அருமையான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 360 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என்பதால், இந்த புதிய தொழில்நுட்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மார்க்கெட்டிற்கு கொண்டு வர ஒரு தசாப்தம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்.
இதுபோன்ற தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஆனால் ஒரு தசாப்தம் என்பது நீண்ட காலமாகதான் தெரிகிறது. ஆனால் தற்போது இது தொடர்பான ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளன. எனவே இதற்கு முன்னதாகவே இதை விட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Note: Images used are for representational purpose only.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!