Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியா-அமெரிக்கா நிறுவனங்கள் கைகோர்ப்பு... மார்க்கெட்டில் தூள் கிளப்ப போகும் புதிய கார் இதுதான்...
மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகவுள்ள சி-எஸ்யூவி ரக கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்தியா உள்பட வளர்ந்து வரும் நாடுகளுக்கு, எலெக்ட்ரிக் கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாட்பார்ம்களை உருவாக்குவதற்காக ஒன்றாக கை கோர்த்துள்ளன. இதுதவிர மார்க்கெட்டில் தங்கள் நிலையை உயர்த்தி கொள்வதற்காகவும், இரு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளவுள்ளன.
Note: Images used are for representational purpose only.
மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படும் முதல் மாடல் 2020ம் ஆண்டின் இறுதியில் வரவுள்ளது. புதிய ஃபோர்டு சி-செக்மெண்ட் எஸ்யூவி (C-segment SUV) காரானது, 2020ம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் எனவும், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கும் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் ஆல் நியூ எக்ஸ்யூவி500 எஸ்யூவி (Mahindra XUV500 SUV) காரை, 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் பிளாட்பார்மைதான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பயன்படுத்தி கொள்ளவுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.
பிளாட்பார்ம் மட்டுமல்லாது, அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் இன்ஜினையும், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரை உற்பத்தி செய்யப்படவுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரும் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்களின் சிறந்த கார் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
பிளாட்பார்ம் மற்றும் இன்ஜின் ஆகியவை மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வந்தாலும், ஃபோர்டு சி-எஸ்யூவி காரானது ஃபோர்டு நிறுவனத்திற்கே உரித்தான புதிய டிசைன் மற்றும் இன்டீரியர்களை பெற்றிருக்கும். இதற்கான பணிகளில் ஃபோர்டு நிறுவனத்தின் இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 மற்றும் 7 சீட்டர் மாடல்களில், புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எங்களின் சிறந்த பைக் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இதன் டிசைன் மற்றும் இன்டீரியர்கள் தொடர்பாக வேறு விரிவான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை என்றாலும், டிரெண்ட்டிங்கில் உள்ள அனைத்து வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய பெரிய SYNC3 இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், ட்யூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய ஸ்மார்ட் கீ எண்ட்ரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம்.
எங்கள் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரில், ஆல் நியூ 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த இன்ஜினை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 180 பிஎச்பி பவரை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இன்ஜின், முதலில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வேடிக்கையான வைரல் வீடியோக்களை காணவும், ஆஃப் பீட் செய்திகளை படிக்கவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
பிஎஸ்-6 (BSVI) மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் இந்த இன்ஜின் இருக்கும். புதிய ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் இன்ஜின் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 வெர்ஷன்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டியிடும்.
தமிழ் டிரைவ்ஸ்பார்க்கில் அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 3 செய்திகள்
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!