Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம்!
புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஜீப் ரேங்லர் எஸ்யூவி ஓவர்லேண்ட், சஹாரா, ரூபிகன் என பல வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நான்காம் தலைமுறை மாடலின் அனைத்து வேரியண்ட்டுகளுமே இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட ஸ்பை படங்க்ள் வெளியாகி இருப்பதால், இந்த வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதில், ரூபிகன் என்ற முழுமையான ஆஃப்ரோடு வேரியண்ட்டானது மோயப் என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியானது 4 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதாவது, 270 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 285 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 3.6 லிட்டடர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.
அதேபோன்று, இரண்டு டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. முதலாவது டீசல் தேர்வில் 197 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 240 பிஎச்பி பவரையும், 570 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு டீசல் மாடலிலும் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது.
அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இதில், ரூபிகன் வேரியண்ட்டில் ஹெவி டியூட்டி ஆக்சில்கள் மற்றும் டிஃபரன்ஷியல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் கொடுக்கப்பட இருக்கும் எஞ்சின் தேர்வுகள் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது இலகுவானதாக இருப்பதுடன், அதிக உறுதித்தன்மை மிக்க ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது மிகச் சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் வகையில், 277 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கும்.
இந்த எஸ்யூவி 30 அங்குல ஆழம் வரையிலான நீர் நிலைகளை கடந்து செல்லும் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாரம்பரிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை மாடலாக வர இருக்கிறது.
அடுத்த மாதம் 9ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடல் ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் நிலையில், சற்று கூடுதலான விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!