Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம்!
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்திய வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் சந்தையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் இருந்து வருகிறது. நேர்த்தியான டிசைன், சிறப்பான கட்டமைப்பு தரம், செயல்திறன் மிக்க எஞ்சின்கள் என சிறந்த மிட்சைஸ் செடான் கார் மாடலாக கூறலாம்.
ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, இந்த காருக்கு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது 92 முதல் 95 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்கோடா தெரிவிக்கிறது. இதன்மூலமாக, போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் தனது தயாரிப்புகளை நிலைநிறுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புரொஜெக்ட் 2.0 திட்டத்தின்மூலமாக இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்பட இருக்கின்றன. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், பல புதிய மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
அந்த வகையில், எம்க்யூவி ஏ0 ஐஎன் பிளாட்ஃபார்மில் புதிய எஸ்யூவி மாடல்களையும், இதர வகை கார்களையும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், அனைவரின் ஆவலையும் தூண்டும் வகையில் புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆம். புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் இந்திய வருகை விபரம் குறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ரேபிட் காரை ஏற்றுமதி செய்யவும் ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். ஆனால், டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படாது.
புதிய ஸ்கோடா ரேபிட் கார் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார்களுடன் இந்த கார் போட்டி போடும்.
Source: Autocarindia