Just In
- 4 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வுகிறார் மோடி... பாஜகவினரை திடீரென குலை நடுங்க வைத்தது இதுதான்...
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மண்ணை கவ்வும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாஜகவினரும் குலை நடுங்கி போயுள்ளனர். இதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 3.15 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில், டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அடக்கம். ஆனால் கடந்த 2017ம் ஆண்டில் 2.75 கோடி வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2018ம் ஆண்டில், வாகனங்கள் உற்பத்தியானது 14.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதற்கு ஏற்ப இந்தியாவில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினால், 'இல்லை' என்பதுதான் பதிலாக கிடைக்கும். இதனால் இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது.
அதே நேரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களுக்கான தேவையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை.
கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் மூலப்பொருள். அதாவது கச்சா எண்ணெய்யில் இருந்துதான் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் வளம் இல்லாததால், இந்தியா அதனை இறக்குமதிதான் செய்து கொண்டுள்ளது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால், நம் நாட்டிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஓராண்டுக்கு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது!!!
தலை சுற்ற வைக்கும் வகையிலான இவ்வளவு பெரிய தொகை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே செலவாகி விடுவதால்தான், இந்தியாவின் பொருளாதாரம் சில சமயங்களில் அதல பாதாளத்திற்கு சென்று விடுகிறது.
எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
ஏனெனில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை குறையும். இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியும் கட்டுப்பாட்டிற்குள் வரும் என மத்திய அரசு நினைக்கிறது.
இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால், இறக்குமதி செய்யும் அளவு குறையும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஏனெனில் இந்த திட்டங்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான், இந்தியாவின் பொருளாதாரத்தை ஓரளவுக்காவது பாதுகாக்க முடியும். அத்துடன் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க முடியும்.
மத்தியில் ஆட்சி செய்யப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்தியாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை உருவெடுத்துள்ளன. இதன் விலை அதிகரித்தால், ஆட்சியாளர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதில் எள் அளவு கூட சந்தேகம் வேண்டாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டு வந்தது. ஆனால் அதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததால், தற்போது பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக குறைந்து வருவதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்க, தற்போது மத்திய அரசுக்கு வேறு விதத்தில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்து கொண்டு வருவதே மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அந்த புதிய சிக்கல்.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா உள்நாட்டில் மொத்தம் 2,880.67 டிஎம்டி (TMT-Thousand Metric Tonne) கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இது 2,780.60 டிஎம்டி ஆக சரிவடைந்துள்ளது.
அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி சுமார் 3.47 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து விடவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு சரிந்து கொண்டுதான் உள்ளது. அதாவது கடந்த 2017-18ம் நிதியாண்டின், ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியா மொத்தம் 23,943.75 டிஎம்டி கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்திருந்தது.
ஆனால் 2018-19ம் நிதியாண்டின், ஏப்ரல்-நவம்பர் வரையிலான கால கட்டத்தில் இது 23,075 டிஎம்டி ஆக சரிவடைந்துள்ளது. இது 3.63 சதவீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி இது போல் குறைந்து கொண்டே வந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
முதலாவதாக வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு உயரும். இதன் காரணமாக ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் தேவை அதிகரித்து, பெட்ரோல், டீசலின் விலை உயரும்.
எனவே உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடுக்கி விட தேவையான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது. இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!