Just In
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 4 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News வறட்சியை நோக்கி வேகமாக நகரும் பெங்களூர்.. தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை! ஷாக் தகவல்
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனியின் அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா?
புதிய தலைமுறை மஹிந்திரா தார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
இதில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கம் முதல், சாலை சோதனை செய்யப்படும்போது, மஹிந்திரா தார் பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.
அனேகமாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், தற்போது உள்ள மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மஹிந்திரா தார் அதிக நீளமாகவும், பெரிதாகவும் வரும் என தெரிகிறது.
இதன் இன்டீரியரில்தான் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தாரில், புதிய டேஷ்போர்டு மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் அப்டேட் செய்யப்பட்ட மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மஹிந்திரா தாரில் வழங்கப்படவுள்ள இன்ஜினை பற்றிய தகவல் மட்டும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதே நேரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின் மஹிந்திரா தாரில் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இருந்தபோதும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய திறன் வாய்ந்ததாக இருக்கும். இதில், மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படும். அதே நேரத்தில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் 3 டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ரூ.6.72 லட்சம் முதல் ரூ.9.49 லட்சம் வரையிலான விலையில் மஹிந்திரா தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மஹிந்திரா தார் ஆஃப் ரோடு வாகனம் ஆகும். ஆனால் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் தார் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் சிந்தித்து வருவது ஏன்? என்பது தெளிவாக தெரியவில்லை.
ஏனெனில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலேயே இது சிறப்பாகதான் செயல்படுகிறது. ஆனால் உறுதியான தகவல் வெளியாகாததால், இது வெறும் புரளியாக கூட இருக்கலாம். எனவே காத்திருந்தால் மட்டுமே நமக்கு உறுதியான விடை கிடைக்கும்.
Image Source: CarBlogIndia
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா