Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் அறிமுகம்: விலையும் ஏறியது!
பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று மாருதி டிசையர். சிறப்பான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், இடவசதி, விலை என அனைத்திலும் இந்தியர்களின் மனதை வென்ற மாடலாக வலம் வருகிறது.
இந்த நிலையில், வரும் ஜூலை 1ல் அமலுக்கு வர இருக்கும் ஏஐஎஸ்-145 என்ற புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து, பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏஐஎஸ்-145 பாதுகாப்பு விதிகளின்படி, புதிய மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இதுதவிர்த்து, மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே இருக்கும்.
புதிய மாருதி டிசையர் காரின் பிஎஸ்-6 எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ரூ.5.82 லட்சம் முதல் ரூ.9.57 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த புதிய மாடலின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், டீசல் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், விலை ரூ.3,000 விலை அதிகரித்துள்ளது. எனினும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாருதி டிசையர் காரின் டீசல் மாடல் கைவிடப்படும் என்று தெரிகிறது.