Just In
- 25 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 33 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோடி அரசுக்கு எதிராக எடப்பாடியார்... அபராத விஷயத்தில் தமிழகம் அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் விஷயத்தில் தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம்தான் தற்போது இந்தியா முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1ம் முதல் அமலுக்கு வந்தன. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு விதமான விமர்சனங்களும் சரி சமசமாக வந்து கொண்டிருந்தன. ஆனால் நாளாக நாளாக எதிர்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றுக்கு 1.41 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு, இந்தியாவில் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இதுதான். இதுபோல் பல்வேறு வாகனங்களுக்கும் பல்லாயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் வாகன ஓட்டிகள் மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதன்பின் பாஜக ஆளும் குஜராத் மாநில அரசே அதிகபட்ச அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் தற்போது போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் குஜராத்தில் இது தற்போது 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தாலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதனையும் குஜராத் அரசு 500 ரூபாயாக குறைத்துள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் குஜராத் அரசு இதனை டூவீலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாகவும், மற்ற வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளது. இதேபோல் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் குஜராத் அரசு குறைத்துள்ளது.
மேற்கண்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது கேரளாவும் இணைந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களை போல், குறிப்பாக குஜராத்தை போல் அபராதத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா? என தமிழக வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. புதிய அபராதங்களை வாகன ஓட்டிகள் மீது தற்போதைக்கு விதிக்க வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டாம் என தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபராத தொகைகள் மிக கடுமையாக இருப்பதால், அதனை குறைக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் சிலர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பச்சை கொடி காட்டி விட்டதால், குஜராத்தை போல் தமிழக அரசும் அபராத தொகைகளை அதிரடியாக குறைக்கவுள்ளது.
இதற்காக ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை தமிழக அரசு அடுத்த வாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகளை குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் தற்போது மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஒடிசா, ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் மீது போலீசார் தற்போது வரை பெரிதாக கெடுபிடி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழக அரசின் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!