Just In
- 1 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு வெறித்தனமான வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே, இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது.
அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாகனங்களுக்கு இன்சூரன்ஸ்ஸை புதுப்பிப்பது மற்றும் டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனங்களை இயக்குவது போன்ற விஷயங்களில், வாகன ஓட்டிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒடிசா மாநிலம் இதற்கு ஓர் உதாரணம். ஒடிசா மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள சூழலில், வினியோகிக்கப்படும் டிரைவிங் லைசென்ஸின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான 3 மாத கால கட்டத்தில், ஒடிசாவில் 5.87 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் (Learner's Driving Licence) வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட்ட பழகுனர் ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை ஆகும்.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாத கால கட்டத்தில் வெறும் 84 ஆயிரம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருந்தன. அதாவது 2018 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2019 செப்டம்பர்-நவம்பர் கால கட்டத்தில், பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வழங்குவது சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
அவ்வளவு ஏன்? கடந்த 2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே ஒடிசாவில் 3.48 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள்தான் வினியோகம் செய்யப்பட்டிருந்தன. 2018ம் ஆண்டு முழுவதும் வினியோகிக்கப்பட்டதை காட்டிலும், 2019ம் ஆண்டின் செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் மிக அதிக அளவிலான பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை சொல்ல வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின், இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிரமான முயற்சியின் விளைவாகதான் இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!