Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பர்... மத்திய அரசின் அதிரடிக்கு கிடைத்த வெறித்தனமான வெற்றி... என்னவென்று தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு வெறித்தனமான வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே, இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது.
அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். குறிப்பாக வாகனங்களுக்கு இன்சூரன்ஸ்ஸை புதுப்பிப்பது மற்றும் டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனங்களை இயக்குவது போன்ற விஷயங்களில், வாகன ஓட்டிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒடிசா மாநிலம் இதற்கு ஓர் உதாரணம். ஒடிசா மாநிலத்தில் டிரைவிங் லைசென்ஸ் கோரும் விண்ணப்பங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள சூழலில், வினியோகிக்கப்படும் டிரைவிங் லைசென்ஸின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான 3 மாத கால கட்டத்தில், ஒடிசாவில் 5.87 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் (Learner's Driving Licence) வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட்ட பழகுனர் ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை ஆகும்.
ஆனால் ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாத கால கட்டத்தில் வெறும் 84 ஆயிரம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருந்தன. அதாவது 2018 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2019 செப்டம்பர்-நவம்பர் கால கட்டத்தில், பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வழங்குவது சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
அவ்வளவு ஏன்? கடந்த 2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே ஒடிசாவில் 3.48 லட்சம் பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள்தான் வினியோகம் செய்யப்பட்டிருந்தன. 2018ம் ஆண்டு முழுவதும் வினியோகிக்கப்பட்டதை காட்டிலும், 2019ம் ஆண்டின் செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் மிக அதிக அளவிலான பழகுனர் ஓட்டுனர் உரிமங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை சொல்ல வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின், இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிரமான முயற்சியின் விளைவாகதான் இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!