Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 8 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 10 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
முல்லைத்தீவு: குருந்தூர் மலையில் தமிழர் வழிபாட்டுத் தலம் அகற்றம்- பெளத்த விகாரைகள் வைத்து வழிபாடு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது... என்னவென்று தெரியுமா?
தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். புதிய அபராத தொகைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அன்று முதல் வெளியாகி வரும் செய்திகள் வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது புதிய அபராத தொகைகளை விதிப்பதில் போலீசார் கடுமையான கெடுபிடிகளை காட்டி வருகின்றனர். எனவே ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், முன்பு 500 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தால், முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம். தற்போது இது 1,000 ருபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கான அபராத தொகையும் 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை முன்பு 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. இது தற்போது 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு விதி மீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இது வாகன ஓட்டிகளை மிக கடுமையாக பாதிக்கும் என கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குஜராத் போன்ற சில மாநிலங்களில் அபராத தொகைகள் குறைக்கப்பட்டு விட்டன.

கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலனை நடத்தி வருகின்றன. இதுதவிர தமிழகத்திலும் அபராத தொகைகள் குறைக்கப்பட உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் அபராத தொகைகளை குறைக்க, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பச்சை கொடி காட்டி விட்டதாக வெளியான அந்த தகவலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் தமிழகத்தில் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியாகும் என்பது தெரியவராமல் இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து தமிழக வாகன ஓட்டிகள் காத்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
MOST READ: யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...?

அப்போது அபராத தொகைகளை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ள அபராத தொகைகள் தமிழகத்தில் குறைக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும்'' என்றார். போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டதால், தமிழகத்தில் அபராத தொகைகள் குறைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனவே தமிழக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.