வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

மோடி அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

இந்திய வாகன ஓட்டிகளை அலற வைத்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அபராத தொகைகளை கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் முயற்சிதான் இது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என மத்திய அரசு கருதுகிறது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

எனவேதான் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்தியது. இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

இந்த சூழலில் மத்திய அரசின் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு, தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதி மீறல்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் 66 சதவீதம் குறைந்துள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக 5,24,819 சலான்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,73,921 சலான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனவே டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளது'' என்றார்.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

2018 மற்றும் 2019ம் ஆண்டுகளின் செப்டம்பர் மாதங்களில் வழங்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான சலான்கள் குறித்த டேட்டாவை டெல்லி போக்குவரத்து போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். பல்வேறு வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களும் குறைந்திருப்பது இந்த டேட்டாவின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

ஓவர் ஸ்பீடு குற்றத்திற்காக டெல்லி போக்குவரத்து போலீசார் கடந்த 2018ம் ஆண்டு 13,281 சலான்களை வழங்கியிருந்தனர். இது கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் 3,366ஆக குறைந்துள்ளது. அதேபோல் ட்ரிபிள் ரைடிங் குற்றத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் 15,261 சலான்கள் வழங்கப்பட்டிருந்தன. இது நடப்பாண்டு செப்டம்பரில் 1,853ஆக குறைந்துள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

அதேபோல் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை 1,04522. ஆனால் இது கடந்த செப்டம்பர் மாதத்தில், 21,154ஆக குறைந்துள்ளது. இதுதவிர குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் சலான் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,682. இது நடப்பாண்டு செப்டம்பரில் 1,475ஆக குறைந்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பரில், சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை 40,065. இது நடப்பாண்டு செப்டம்பரில் வெறும் 6,445ஆக குறைந்துள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

அதே நேரத்தில் ஒரு சில போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை உயர்ந்தும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக சலான் பெற்றவர்களின் எண்ணிக்கை 5,120 மட்டுமே. இது நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 11,529ஆக உயர்ந்துள்ளது.

வெறும் முப்பதே நாட்களில் தலைகீழ் மாற்றம்... இந்தியாவிற்கு மோடி அரசு செய்த நல்ல காரியம் இதுதான்...

அதேபோல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக சலான் பெற்றவர்களின் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்துள்ளது. இந்த குற்றத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை 3,279 மட்டுமே. ஆனால் இது நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 13,659ஆக உயர்ந்துள்ளது.

Most Read Articles
English summary
New Motor Vehicles Act: Traffic Violations In Delhi Reduced By 66 Per cent. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X