Just In
- 22 min ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 44 min ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 1 hr ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 4 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
Don't Miss!
- News துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Movies ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி முடிவால் நல்ல காரியம் நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
முன்பு அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையும் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் 1,000 ரூபாயும், செல்போனில் பேசி கொண்டு வாகனங்களை இயக்கினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எனினும் மத்திய அரசு அதனை பொருட்படுத்தவில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி இது என மத்திய அரசு பதில் அளித்தது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு உறுதியாக அமல்படுத்தியதால் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறைந்து வருகின்றன.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு சண்டிகரில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. சண்டிகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 40,405 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.
சண்டிகர் போக்குவரத்து போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். சண்டிகர் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் 20,738 செல்லான்களையும், பிப்ரவரி மாதம் 26,137 செல்லான்களையும், மார்ச் மாதம் 30,567 செல்லான்களையும் வழங்கியிருந்தனர். அதே சமயம் ஏப்ரல் மாதம் 26,565 செல்லான்களும், மே மாதம் 23,945 செல்லான்களும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்டிருந்தன.
அதே நேரத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முறையே 21,703 மற்றும் 24,347 செல்லான்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20,628 பேருக்கு செல்லான்கள் வழங்கப்பட்டன. இதன்பின்பு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் மாதமான செப்டம்பரில் 17,771 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன்பின் அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால், போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சற்று அதிகரித்தது. அந்த மாதத்தில் 22,634 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்விரு மாதங்களிலும் ஒன்றாக சேர்த்து 40,405 செல்லான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி பார்த்தால் சண்டிகரில் போக்குவரத்து விதிமீறல்கள் 35 சதவீதம் குறைந்துள்ளன. இந்த 40,405 செல்லான்களில் அதிகபட்சமாக ஜீப்ரா லைன் விதிமுறை மீறலுக்காக 10,111 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு 8,939 செல்லான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 8,939 பேரில், பெண்கள் மற்றும் பில்லியன் ரைடர்களின் எண்ணிக்கை 1,912. இதுதவிர தவறான இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்த காரணத்திற்காக 4,718 பேருக்கும், அபாயகரமான முறையில் யூ-டர்ன் எடுத்த காரணத்திற்காக 3,624 செல்லான்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த டேட்டாவை சண்டிகர் போக்குவரத்து போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!
-
900 கி.மீ தூரத்தை வெறும் 3.5 மணி நேரத்தில் கடந்து செல்லலாம்! இந்தியாவின் வேகமான புல்லட் ரயில் இது தான்!
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!