Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய ஸ்கோடா ரேபிட் காரின் அதிகாரப்பூர்வ உருவரை படம் வெளியீடு!
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் அதிகாரப்பூர்வ உருவரை படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த படத்தையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் செடான் பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் மற்றும் சேவை தரத்தில் உள்ள குறைபாடுகளால் போதிய விற்பனையை பெற முடியாமல் திணறி வருகிறது.
சிறந்த கார் மாடலாக இருந்தாலும் விற்பனையில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் புதிய வர்த்தக கொள்கைகளை செயல்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதன்படி, பல புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த பட்டியலில் புதிய ஸ்கோடா ரேபிட் செடான் காரும் உள்ளது.
தற்போது உருவாக்கப்ப பணிகளில் இருக்கும் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் உருவரை படம் ஒன்று அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், புதிய ரேபிட் கார் டிசைன் முற்றிலும் புதிய முறையில் மாற இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. வழக்கம்போல் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் முற்றிலும் புதிய தோற்றத்தில் ரேபிட் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.
புதிய தலைமுறை சூப்பர்ப் காரின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய ரேபிட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதை இந்த உருவரை படம் மூலமாக தெரிகிறது. புதிய எல்இடி ஹெட்லைட் , க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், கூரை அமைப்பு என அசத்துகிறது. ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.
புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.
புதிய ஸ்கோடா ரேபிட் கார் அடுத்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.