Just In
- 42 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா?
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகிலேயே போக்குவரத்து விதிமுறைகள் மிக அதிகமாக மீறப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாகன ஓட்டிகளின் இந்த அலட்சியம் காரணமாக, உலகின் மிக அபாயகரமான சாலைகளை கொண்ட நாடு என்ற மோசமான பெயரை எடுத்துள்ளது இந்தியா. ஆம், இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவைதான். இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்களை காவு வாங்குகின்றன.
சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்கள் பறிபோவது மிக வேதனையான விஷயம். எனவே தற்போது போக்குவரத்து விதிமுறை மீறல்களை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கரிசணம் காட்டி கொண்டே இருந்தால், வருங்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும்.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றால், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் தற்போது அதைத்தான் செய்ய தொடங்கியுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை தற்போது மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த அபராத தொகையை காட்டிலும், புதிய அபராத தொகை 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கவனம் இல்லாமல் கண் மூடித்தனமாக வாகனங்களை இயக்கினாலும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இது முதல் முறை குற்றத்திற்கு மட்டுமே. இந்த குற்றத்திற்கு 2வது முறையில் இருந்து 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாய். நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனங்களை நிறுத்தினாலும் 1,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால், முதல் முறை குற்றத்திற்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்திற்கு 2வது முறையில் இருந்து 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதும் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்களுக்குதான் தற்போது பெரிய அளவில் 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர் ஹெல்மெட்களுக்கு உள்ளே செல்போனை வைத்து கொள்ளும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். இதன் மூலம் இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கும்போது செல்போனில் பேசி வருகின்றனர். ஆனால் இனி ஹெல்மெட்டிற்கு உள்ளே செல்போனை சொருகி வைத்திருந்தாலே குற்றம்தான். பேசினாலும், பேசாவிட்டாலும் கூட ஹெல்மெட்டிற்கு உள்ளே செல்போன் சொருகி வைக்கப்பட்டிருக்க கூடாது.
அதேபோல் கார் அல்லது டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும்போது இயர்போன்களை பயன்படுத்தும் பழக்கமும் பலருக்கும் உள்ளது. ஆனால் இனி இவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் வாகனம் இயக்கும்போது இயர்போன் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் இயர்போன்களை பயன்படுத்தி செல்போனில் பேசினால்தானே குற்றம்? பாடல்களை கேட்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
சரியான சந்தேகம்தான். ஆனால் வாகனம் இயக்கும்போது இயர்போன் மூலமாக பாடல்களையும் கேட்க கூடாது. பேசவும் கூடாது. தெளிவாக சொல்வதென்றால், வாகனம் இயக்கும்போது எக்காரணத்தை கொண்டும் இயர்போன்களை பயன்படுத்த கூடாது. அதே நேரத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த இன்னும் சிலர் வித்தியாசமாக யோசிப்பார்கள்.
அதாவது இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பில்லியன் ரைடர் (பின்னால் அமர்ந்திருப்பவர்) செல்போனை ஸ்பீக்கர் மோடில் போட்டு, டூவீலரை இயக்குபவரின் காதுக்கு அருகில் வைப்பார். அவரும் ஹாயாக பேசி கொண்டே வருவார். இதுவும் குற்றம்தான். அதாவது வாகனம் இயக்கும்போது நீங்கள் எந்தவகையிலும் செல்போனில் பேசக்கூடாது.
இது உங்களின் கவனத்தை சிதறடித்து, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கார் ஓட்டுபவர்களுக்கும் இது பொருந்தும். வாகனம் இயக்கும்போது செல்போன் உரையாடலின் ஒரு பகுதியாக நீங்கள் இருந்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சரி, வாகனம் ஓட்டும்போது நான் செல்போன் பயன்படுத்தி விட்டேன். ஆனால் போலீசாரிடம் அதை நான் மறுத்தால் என்ன ஆகும் என கேட்கிறீர்களா?
அருகாமையில் உள்ள உயர்தரமான சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கர்நாடக மாநில போலீசார் இந்த விதிமுறைகளை இன்று (ஜூலை 20) முதல் மிக தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். அதிலும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், இந்த விதிமுறைகளை மிக கடுமையாக பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177 மற்றும் கர்நாடகா மோட்டார் வாகன விதிகளின் செக்ஸன் 230ஏ ஆகியவற்றின்படி, வாகனங்களை இயக்கும்போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லை என்பதால், தளர்வு வழங்கப்பட்டுள்ளது. செல்போன்களை ஆனில் வைத்து கொள்ளலாம். ஆனால் வாகனம் இயக்கும்போது பேசக்கூடாது.
டிராபிக் சிக்னல்களில் காத்திருக்கும்போது கூட செல்போனில் பேச கூடாது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் குறிப்பாக பெரு நகரங்களில் கூகுள் மேப் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு இடத்திற்கு சென்று சேர்வது கடினம். எனவே இதற்காகவும் செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் அதற்கென உள்ள ஹோல்டரில்தான் செல்போன் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஹோல்டரில் செல்போன் இருந்தால் விதிமீறல் ஆகாது. ஆனால் வழிகளை பார்ப்பதற்காக செல்போனை உங்கள் கையில் வைத்திருந்தால், அது விதிமீறலாகவே கருதப்படும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகையை உயர்த்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இது ஊழலுக்கும் வழிவகுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. அதிக அபராத தொகையை பயன்படுத்தி கொண்டு கல்லா கட்டா முயற்சிக்கும் ஒரு சில போலீசாரின் நடவடிக்கைகளை தடுப்பதும் அவசியம்.
Note: Images used are for representational purpose only.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!