Just In
- 8 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது!
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்திய பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்று. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்திய பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்று. ஆனால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், அந்த விலையில் 5 சீட்டர் மாடல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகவும் வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் புரொஜெக்ட் 2.0 திட்டத்தின்படி, பல புதிய மாடல்களை அதிரடியாக களம் இறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் லாங் வீல் பேஸ் (7 சீட்டர்) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது உள்ள டிகுவான் எஸ்யூவியின் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு இரண்டு வீல் பேஸ் நீளம் கொண்ட மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ஸ்டான்டர்டு மாடலாக குறிப்பிடப்படும் குறைவான வீல் பேஸ் நீளம் கொண்ட மாடல் 2017ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், அதிக வீல் பேஸ் நீளமுடைய மாடலும் இந்தியா வர இருப்பதுதான் இப்போதைய முக்கிய செய்தியாக இருக்கிறது. அதேநேரத்தில், குறைவான வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலுக்கு மாற்றாக வருமா அல்லது இரண்டு மாடல்களுமே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து இப்போது தகவல்கள் இல்லை. அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலானது டிகுவான் ஆல்ஸ்பேஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.
புதிய ஆல்ஸ்பேஸ் மாடலானது 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வரும். அதாவது, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு நிகரான மாடலாக நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். எனவே, கோடியாக் எஸ்யூவியைவிட விலை குறைவாக இருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் இப்போது இருக்கும் அதே சிறப்பம்சங்கள், வசதிகள் புதிய ஆல்ஸ்பேஸ் மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இருக்கை வசதியில் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.
புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி அவுரங்காபாத் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ரூ.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Carandbike