Just In
- 24 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடித்த அதிர்ஷ்டம்... என்னவென்று தெரியுமா?
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது பொதுமக்களின் கவனம் திரும்பி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாக மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
இந்த சூழலில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஓட்டியுள்ளார். எம்ஜி இஸட்எஸ் (MG ZS) கார்தான் அது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் இது போட்டியிடவுள்ளது.
எம்ஜி நிறுவனம் இன்று (டிசம்பர் 19) டிரைவ் ஈவெண்ட் ஒன்றை நடத்தியது. அப்போதுதான் அமைச்சர் நிதின் கட்கரி எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஓட்டினார். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் புகழ்பெற்ற எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஜூன் மாதம் களமிறங்கியது. அப்போது முதல் தயாரிப்பாக ஹெக்டர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இந்திய மார்க்கெட்டில் வெளியிட்டது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில், 44.5 kWh, லிக்யூட்-கூல்டு NMC (Nickel Manganese Cobalt) பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இந்த காரின் மின் மோட்டார் 353 என்எம் டார்க் மற்றும் 143 பிஎஸ் பவரை வெளிப்படுத்த கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் இந்த எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு உண்டு.
சூப்பர்-ஃபாஸ்ட் டிசி சார்ஜர்கள் (50 kW) மூலம் சார்ஜ் செய்தால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். அதே சமயம் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் மூலமாக சார்ஜ் செய்தால், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற தோராயமாக 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஓட்டுவதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கும் சூழலில், அந்த அதிர்ஷ்டம் அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போதே அடித்துள்ளது. மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருபவர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அத்துடன் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் அளவு கணிசமாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!