Just In
- 1 hr ago மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- 1 hr ago நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
- 2 hrs ago சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- 3 hrs ago இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
Don't Miss!
- News கன்னியாகுமரி: குமரி முனையில் முதல் முறையாக உதயமாகுமா அதிமுகவின் இரட்டை இலை?
- Technology இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- Movies விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Finance ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குதா.. பெண்களுக்கு குஷிதான்..இதை பாருங்க!
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்!
ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செயலால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சரியாகிவிடும், இல்லை பண்டிகை காலத்தில் சரியாகிவிடும் என்று காத்திருந்த வாகன உற்பத்தி நிறுவனங்களின் நம்பிக்கை பொய்த்து வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறையும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக, கார் உற்பத்தி ஆலை யார்டுகளிலும், டீலர்களிலும் தொடர்ந்து வாகனங்கள் தேக்கமடைந்து வருகின்றன.
ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு சில மேலோட்டமான சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். ஆனால், அதனால் எதிர்பார்த்த அளவுக்கு வாகனத் துறை எழுச்சி பெறவில்லை. தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே செல்கிறது.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதுதான் ஒரே வழியாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், நேற்று கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், கார், பைக்குகளின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
எனினும், கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறைக்கு சற்று பயன் கிடைக்கும். இதனை வைத்து கார், பைக் நிறுவனங்கள் சமாளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வாகனத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு, ஜிஎஸ்டி வரியை குறைப்பதே ஒரே வழியாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!
-
நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த ஓலா.. சைக்கிள் வாங்குறதபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டர வாங்க போறாங்க!
-
இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!