Just In
- 34 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்!
ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செயலால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சரியாகிவிடும், இல்லை பண்டிகை காலத்தில் சரியாகிவிடும் என்று காத்திருந்த வாகன உற்பத்தி நிறுவனங்களின் நம்பிக்கை பொய்த்து வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறையும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக, கார் உற்பத்தி ஆலை யார்டுகளிலும், டீலர்களிலும் தொடர்ந்து வாகனங்கள் தேக்கமடைந்து வருகின்றன.
ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு சில மேலோட்டமான சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். ஆனால், அதனால் எதிர்பார்த்த அளவுக்கு வாகனத் துறை எழுச்சி பெறவில்லை. தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே செல்கிறது.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதுதான் ஒரே வழியாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், நேற்று கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், கார், பைக்குகளின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
எனினும், கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறைக்கு சற்று பயன் கிடைக்கும். இதனை வைத்து கார், பைக் நிறுவனங்கள் சமாளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வாகனத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு, ஜிஎஸ்டி வரியை குறைப்பதே ஒரே வழியாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.