Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆட்டோமொபைல் துறைக்கு 'அல்வா' கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில்!
ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செயலால் ஆட்டோமொபைல் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் சரியாகிவிடும், இல்லை பண்டிகை காலத்தில் சரியாகிவிடும் என்று காத்திருந்த வாகன உற்பத்தி நிறுவனங்களின் நம்பிக்கை பொய்த்து வருகிறது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறையும், புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக, கார் உற்பத்தி ஆலை யார்டுகளிலும், டீலர்களிலும் தொடர்ந்து வாகனங்கள் தேக்கமடைந்து வருகின்றன.
ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு சில மேலோட்டமான சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். ஆனால், அதனால் எதிர்பார்த்த அளவுக்கு வாகனத் துறை எழுச்சி பெறவில்லை. தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே செல்கிறது.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதுதான் ஒரே வழியாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், நேற்று கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், கார், பைக்குகளின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
எனினும், கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறைக்கு சற்று பயன் கிடைக்கும். இதனை வைத்து கார், பைக் நிறுவனங்கள் சமாளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், வாகனத் துறையை தூக்கி நிறுத்துவதற்கு, ஜிஎஸ்டி வரியை குறைப்பதே ஒரே வழியாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.