Just In
- 40 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்... மத்திய அரசின் அதிரடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்...
டோல்கேட்களில் நீங்கள் இதை செய்தால் இனி 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில், அனைத்து வாகனங்களும் ரொக்கமாக பணம் செலுத்தி செல்ல நீண்ட நேரமாகிறது. இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் பிரச்னையையும் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் டோல்கேட்களில் பாஸ்ட்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் பாஸ்ட்டேக் முறைக்கு மாறுவது அவசியமாகிறது.
பாஸ்ட்டேக் அட்டையை பெற வாகனத்தின் ஆர்சி புக் மற்றும் வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் 500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். இதில், 250 ரூபாய் திரும்பபெறதக்கது. 100 ரூபாய் பாஸ்ட்டேக் அட்டைக்கானது. 150 ரூபாய் சர்வீஸ் சார்ஜ். இந்த பாஸ்ட்டேக் அட்டையை உங்கள் வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் பொருத்தி கொள்ளலாம்.
தேவைப்படும் சமயங்களில் செல்போனை போன்று இதற்கு உங்களால் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். உங்கள் வாகனம் டோல்கேட்டில் நுழையும்போது அங்குள்ள சிறப்பு உபகரணங்கள் பாஸ்ட்டேக் அட்டையை 'ரீட்' செய்யும். இதன்பின் அந்த டோல்கேட்டிற்கான கட்டணம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து கழித்து கொள்ளப்படும்.
இதற்கென டோல்கேட்களில் பாஸ்ட்டேக் லேன் என பிரத்யேகமான லேன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாஸ்ட்டேக் லேனில் செல்வதன் மூலம் நீங்கள் டோல்கேட்டை விரைவாக கடந்து செல்ல முடியும். பணம் செலுத்த காத்திருக்க தேவையில்லை. இதன் காரணமாக டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
எனவேதான் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஸ்ட்டேக் மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 1 முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என்றாலும், ரொக்கமாக பணத்தை ஏற்று கொள்ள ஒவ்வொரு டோல்கேட்களிலும் ஒரு லேன் இருக்கவே செய்யும்.
ஆனால் ரொக்கமாக பணத்தை செலுத்தி செல்ல ஒரே ஒரு லேன் மட்டுமே இருப்பதால், பாஸ்ட்டேக் இல்லாதவர்கள் டோல்கேட்டை கடக்க நீண்ட நேரம் ஆகலாம். இதற்காக பாஸ்ட்டேக் இல்லாதபோதும், பாஸ்ட்டேக் லேனில் நுழைந்து டோல்கேட்டை கடந்து சென்று விடலாம் என கற்பனை கூட செய்து பார்த்து விடாதீர்கள்.
ஏனெனில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்ட்டேக் இல்லாத வாகன ஓட்டிகள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழையும் பட்சத்தில், அவர்களிடம் இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே பாஸ்ட்டேக் இல்லாத பட்சத்தில், தப்பி தவறி கூட பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழைந்து விடாதீர்கள்.
இந்த பிரச்னைகளை சமாளிக்க வேண்டுமென்றால், டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு நீங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறி கொள்வது நல்லது. பாஸ்டேக்கை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவானது, சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்களின் நான்-ஸ்டாப் மூவ்மெண்ட்டிற்கும் உதவி செய்யுமா? என்பது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!