Just In
- 1 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- News முன்னோடி தமிழ்நாடு.. நம்ம ஆட்சியில் இது முக்கியம்! பட்டியல் போட்ட முதல்வர்..வியந்து பார்த்த INDIA!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பியாஜியோ அபே எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுக தேதி விபரம்
அபே அடிப்படையிலான மின்சார எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வர இருக்கும் அபே எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வரும் 18
பியாஜியோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம் செய்யும் தேதி விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் அபே ஆட்டோரிக்ஷா சிறந்த போக்குவரத்து சாதனமாக விளங்கி வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் பியோஜியோ அபே ஆட்டோரிக்ஷா பெரிய அளவிலான வரவேற்பை பெற்ற மாடலாகவும் உள்ளது. அதிக இடவசதி, கட்டுறுதி, அதிக எரிபொருள் சிக்கனம் ஆகியவை இந்த ஆட்டோரிக்ஷாவிற்கு தனி மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், அபே அடிப்படையிலான மின்சார எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக வர இருக்கும் அபே எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் அண்மையில் தனது எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களை அறிமுகப்படுத்திய நிலையில், பியாஜியோ நிறுவனமும் இந்த மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
பியாஜியோ நிறுவனத்தின் புதிய மின்சார ஆட்டோரிக்ஷாவின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்திய போக்குவரத்துத் துறையில் தங்களது புதிய எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பியாஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த சன் மொபிலிட்டி நிறுவனத்தின் துணையுடன் இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த மாதம் பியாஜியோ தெரிவித்திருந்தது. அதாவது, பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா வர இருக்கிறது. இந்த பேட்டரி மாற்றிக் கொடுக்கும் வர்த்தகத்தை சன் மொபிலிட்டி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பியாஜியோ எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா சிறப்பான பிக்கப், மின்சிக்கனம் ஆகியவற்றுடன் கட்டுறுதி மிக்கதாக இருக்கும். எனவே, வழக்கம்போல் தனது மார்க்கெட்டை இந்த புதிய மின்சார ஆட்டோரிக்ஷா மூலமாக பியாஜியோ தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் பேட்டரியை மாற்றி பயணத்தை இலகுவாக தொடர்வதற்கான வாய்ப்பு அளிப்பதற்கான முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் தயாராக இருக்கும் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் நிலையங்களை அமைப்பதற்கும் பியாஜியோ திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று, மிக விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பியாஜியோ முடிவு செய்துள்ளது. வரும் 18ந் தேதி புதிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகன அறிமுகத்தின்போது இதற்கான தகவல்கள் வெளியிடப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!