Just In
- 1 hr ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 2 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 4 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 9 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Movies ஷங்கர் மகளின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்ச காட்டு மைனா போல் ஜொலித்த நடிகை அதிதி ஷங்கர்!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கருப்பு நிற ஜன்னல் காரில் கெத்தாக வலம் வந்த எம்எல்ஏ-வுக்கு அபராதம்... என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க!!
கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்ட காரில் கெத்தாக வந்த எம்எல்ஏ-வுக்கு போலீஸார் அபராத செல்லாணை வழங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
புதிய மோட்டார் வாகன சட்டம் 2019, நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டு நேற்றுடன் (திங்கள்கிழமை) ஒரு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், இதன் தாக்கம் இந்தியர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.
இதற்கு முன்பாக அரங்கேற்றப்பட்ட பல்வேறு விஷயங்களை கடந்து செல்ல முடிந்த மக்களால், இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை என்ற தகவல் பரவலாக பேசப்படும் சூழல் காணப்படுகின்றது.
அதேசமயம், இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தில் குடிமகன்கள் மட்டுமே சிக்கிக் கொள்வதில்லை. அவவ்வப்போது, அரசு அதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் சிக்கி வருகின்றனர். ஏன், ஒடிசா மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் சிக்கியதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னா பகுதியில் ஓர் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) விதிமீறலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
பாட்னா பகுதியைச் சேர்ந்த போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சன் ஃபிலிம் எனப்படும் சூரிய வெளிச்சம் உட்புக முடியாத அடர்ந்த கருப்பு நிறத்தினாலான ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி ரக கார் வந்தது.
அதனை மடக்கியப் போலீஸார், அந்த கார்குறித்த ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, அந்த கார் பாட்னா பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பிரதீப் சிங்-கிற்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரும் அந்த காரில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், ஆவணங்களை சரிபார்த்த போலீஸார், காரின் ஜன்னல்களில் கருப்பு நிற கண்ணாடி பொருத்தியிருந்ததற்கான அபராதச் செல்லாணை வழங்கினர்.
தொடர்ந்து, காரின் மேற்பகுதியில் சைரன் மற்றும் பிளாஷர்கள் எனப்படும் மின் விளக்குகளும் பொருத்தியிருந்தன. இதுவும் சட்ட விரோதமானதாகும். இத்தைகய சைரன்களை நாட்டின் பிரதமர் உட்பட இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பயனப்படுத்த முடியாதாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அவசரகால வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு சில அரசியல்வாதிகள் பல முறை அபராதம் பெற்ற சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இருப்பினும், பிரதீப் சிங் போன்ற சில அரசியல்வாதிகள் அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பதில்லை.
மேலும், பிரதீப் சிங்கிற்கு பாட்னா போலீஸார் இந்த முறைகேட்டிற்காக அபராதம் விதிக்கவில்லை. அதேபோன்று, காரில் அமர்ந்திருந்த ஓட்டுநர் சீட் பெல்டை அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், எம்எல்ஏ-வின் காருக்கு கருப்பு ஜன்னல்களுக்காக மட்டும் அபராதம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் அதிகம் மீறப்படும் விதிகளில் ஒன்றாக இது இருக்கின்றது. பெரும்பாலும், தலைநகர் டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களின் போலீஸார் இந்த விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் தங்களை சூரியனில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இதனை பயன்படுத்துகின்றனர்.
வாகனங்களில் சந்தைக்குப்பிறகாக செய்யப்படும் எந்த மாற்றத்தையும் அரசு அனுமதிப்பதில்லை. அதில், இதுவும் ஒன்றாகும். இதனை நிரூபிக்கும் வகையில், பாட்னா போலீஸார், எம்எல்ஏ-வின் காருக்கு அபராதத்தை வழங்கியுள்ளனர்.
கருப்பு நிற ஜன்னல்கள்மீது அரசு இத்தகைய தீவிரத்தை காண்பிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில், மிக முக்கியமானதாக, வாகனத்திற்குள் நடக்கும் குற்றங்களை வெளியில் இருந்து காண்பதற்கு கடினம் என்பதாலும், சக வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து உள்ள வாகனங்களை காண்பதில் சிரமம் ஏற்படுத்துவதன் காரணத்தாலும் இத்தகைய கெடுபிடி காட்டப்படுகின்றது.