Just In
- 53 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை... நாடு முழுவதும் கவனம் ஈர்த்த போலீஸ் அதிகாரி
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதாவது இந்திய சாலைகள் நாள் ஒன்றுக்கு 821 பேரின் உயிரையும், ஒவ்வொரு மணி நேரமும் 34 பேரின் உயிரையும் பறிக்கின்றன.
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் இங்கு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் தண்டனை வழங்கப்படுவது கிடையாது.
அதற்கு மாறாக குறைந்தபட்ச அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் அலட்சியமே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீற மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனை புரிந்து கொண்ட போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு தற்போது மிகவும் வித்தியாசமான தண்டனைகளை வழங்க தொடங்கியுள்ளனர்.
இந்த தண்டனை வித்தியாசமானதாக பார்க்கப்பட்டாலும் கூட, சற்று கடுமையாகதான் உள்ளது. எனவே இனி வருங்காலங்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களின் பெயர், முகவரி, அவர் மீது பதியப்பட்ட வழக்குகளின் விபரம், நாள், நேரம், பிடிபட்ட இடம், வாகனத்தின் எண் உள்ளிட்ட தகவல்களை பொது வெளியில் பகிரும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட நபர் வேலையை கூட இழக்க நேரிடலாம்.
இதுமட்டுமல்லாமல், இந்த தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி வருங்காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகர போலீசார்தான் தற்போது இத்தகைய நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதற்கு உடனடி பலன் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் நேற்று (டிசம்பர் 31) இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
இதன் ஒரு பகுதியாக பலர் குடிபோதையில் வாகனங்களை இயக்கினர். அப்போது புனே மாநகரில், குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 873 பேர் சிக்கினர். ஆனால் கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, 1144 பேர் சிக்கியிருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. புனே மாநகர போலீஸ் கமிஷனர் வெங்கடேசம்தான், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், குடிபோதையில் வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.
இந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார். இந்த சூழலில் தற்போது மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, நாடு முழுவதும் அவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புனே மாநகர போலீசாரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளதால், இனி வருங்காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள சூழலில், இந்திய அளவில் விபத்துக்களின் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதவிர 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!