Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொறுங்கி விபத்து... வீடியோ!
பாஜக பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பிற்காக பயன்படுத்திய ஜீப்பின் கம்பிகள் திடீரென நொறுங்கியதால் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் வருகின்ற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பை அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, அவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் திருவிழா கலை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுவாக இந்தியாவில் பண்டிகைக் காலங்களுக்கு இணையாக தேர்தலையும் திருவிழாவைப் போன்று அரசியல் வாதிகள் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும்போது விதவிதமான வாகனங்களின் அணிவகுப்பிலும், மேள தாளங்களுடன் அவர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்காக திறந்தவெளி வாகனங்கள் அல்லது மக்களிடம் நேரடி உரையாடலை நிகழ்த்துகின்ற வகையிலாக மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட மாடிஃபை கட்டமைப்பு கொண்ட வாகனம் ஒன்று, திடீரென நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
பாஜக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சண்டா மாத்ரே என்பவரின் பிரச்சாரத்தின்போதுதான் இந்த இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர்போனவர் சண்டா மாத்ரே. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது வாக்குசேகரிப்பிற்கு சென்றிருந்த அவர், தொண்டர்கள் அனைவரும் இருமுறை ஓட்டு பொத்தானை அழுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சட்ட சிக்கலிலும் அவர் சிக்கினார்.
இந்நிலையில், அவர் இன்று (திங்கள்கிழமை) வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனங்களின் கூட்டங்களுக்கு நடுவே ஜீப்பில், மக்களைச் சந்தித்தவாறு சென்றுக் கொண்டிருந்தார்.
இந்த ஜீப் பிரச்சாரத்திற்கென பிரத்யேகமாக பஞ்சாப் மாநிலத்தில் வரவழைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதனை, உறுதி செய்யும் வகையில் அந்த வாகனத்தில் பொருத்தியுள்ள பதிவெண் காணப்படுகின்றது.
அந்த ஜீப், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதைக் கூட வெளிக்காட்டாத வகையில் மாடிஃபை செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
அந்தவகையில், ஜீப்பின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்புறங்கள் கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைச் சாலையில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.
ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தலின்போது இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், மண்டா மாத்ரே பயன்படுத்திய ஜீப்பில் உறுதியற்ற கம்பிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாகவே அந்த கம்பிகள் எளிதில் நொறுங்கியுள்ளன.
இது வெளியாகியுள்ள வீடியோவில், சண்டா மாத்ரே சென்ற ஜீப் அதிகபட்சமாக 40 முதல் 50 கிமீ என்ற வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது. அவருடன் தொண்டர்களும் அந்த ஜீப்பில் பயணிக்கின்றனர். அவ்வாறு, இருவர் மட்டுமே அமர வேண்டிய அந்த இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் நின்றவாறு பயணிக்கின்றனர். அப்போது, சிறிய வேகத்தடை வந்ததையடுத்து, ஜீப்பின் ஓட்டுநர் பிரேக் பிடிக்கின்றார்.
அதில், நிலை தடுமாறிய தொண்டர்கள் அனைவரும் ஜீப்பின் கம்பி மீது சாய்ந்தனர். ஆனால், அது உறுதியற்று நின்றுக் கொண்டிருந்ததால், உடனே முன்பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளாகின்றது.
இதில், எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகியவில்லை. ஆனால், காயமுற்ற அனைவரையும் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு