Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொறுங்கி விபத்து... வீடியோ!
பாஜக பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பிற்காக பயன்படுத்திய ஜீப்பின் கம்பிகள் திடீரென நொறுங்கியதால் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் வருகின்ற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பை அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, அவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் திருவிழா கலை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுவாக இந்தியாவில் பண்டிகைக் காலங்களுக்கு இணையாக தேர்தலையும் திருவிழாவைப் போன்று அரசியல் வாதிகள் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும்போது விதவிதமான வாகனங்களின் அணிவகுப்பிலும், மேள தாளங்களுடன் அவர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்காக திறந்தவெளி வாகனங்கள் அல்லது மக்களிடம் நேரடி உரையாடலை நிகழ்த்துகின்ற வகையிலாக மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட மாடிஃபை கட்டமைப்பு கொண்ட வாகனம் ஒன்று, திடீரென நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
பாஜக கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சண்டா மாத்ரே என்பவரின் பிரச்சாரத்தின்போதுதான் இந்த இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர்போனவர் சண்டா மாத்ரே. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது வாக்குசேகரிப்பிற்கு சென்றிருந்த அவர், தொண்டர்கள் அனைவரும் இருமுறை ஓட்டு பொத்தானை அழுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சட்ட சிக்கலிலும் அவர் சிக்கினார்.
இந்நிலையில், அவர் இன்று (திங்கள்கிழமை) வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனங்களின் கூட்டங்களுக்கு நடுவே ஜீப்பில், மக்களைச் சந்தித்தவாறு சென்றுக் கொண்டிருந்தார்.
இந்த ஜீப் பிரச்சாரத்திற்கென பிரத்யேகமாக பஞ்சாப் மாநிலத்தில் வரவழைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதனை, உறுதி செய்யும் வகையில் அந்த வாகனத்தில் பொருத்தியுள்ள பதிவெண் காணப்படுகின்றது.
அந்த ஜீப், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதைக் கூட வெளிக்காட்டாத வகையில் மாடிஃபை செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
அந்தவகையில், ஜீப்பின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்புறங்கள் கடுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைச் சாலையில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.
ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தலின்போது இதுபோன்ற மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், மண்டா மாத்ரே பயன்படுத்திய ஜீப்பில் உறுதியற்ற கம்பிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாகவே அந்த கம்பிகள் எளிதில் நொறுங்கியுள்ளன.
இது வெளியாகியுள்ள வீடியோவில், சண்டா மாத்ரே சென்ற ஜீப் அதிகபட்சமாக 40 முதல் 50 கிமீ என்ற வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது. அவருடன் தொண்டர்களும் அந்த ஜீப்பில் பயணிக்கின்றனர். அவ்வாறு, இருவர் மட்டுமே அமர வேண்டிய அந்த இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் நின்றவாறு பயணிக்கின்றனர். அப்போது, சிறிய வேகத்தடை வந்ததையடுத்து, ஜீப்பின் ஓட்டுநர் பிரேக் பிடிக்கின்றார்.
அதில், நிலை தடுமாறிய தொண்டர்கள் அனைவரும் ஜீப்பின் கம்பி மீது சாய்ந்தனர். ஆனால், அது உறுதியற்று நின்றுக் கொண்டிருந்ததால், உடனே முன்பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளாகின்றது.
இதில், எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகியவில்லை. ஆனால், காயமுற்ற அனைவரையும் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!