Just In
- 29 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 4 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய பிரம்மாண்ட ரெனால்ட் காரின் விலை இதுதான்... மிக மிக குறைவு என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...
ரெனால்ட் நிறுவனம் புதிய பிரம்மாண்ட கார் ஒன்றை மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம், இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் அந்நிறுவனத்தின் ''க்விட்'' (Renault Kwid) தவிர, வேறு எந்த காரும் இங்கு பெரிய அளவில் விற்பனையாவது கிடையாது. இதனால் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனம் தத்தளித்து கொண்டுள்ளது.
ஆனால் அடுத்த 2-3 ஆண்டுகளில், கார்கள் விற்பனையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே தற்போது உள்ள சில மாடல்களை அப்டேட் செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இதுதவிர விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, புதிய கார் மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதன்படி க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், சிறிய எஸ்யூவி, சிறிய செடான் மற்றும் 7 சீட்டர் எம்பிவி என மொத்தம் 4 புதிய கார்களை ரெனால்ட் நிறுவனம் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 7 சீட்டர் எம்பிவி ரக கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் தற்போதைக்கு ஆர்பிசி (Renault RBC) என்ற இடைக்கால குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் இரண்டாவது எம்பிவி ரக காராக ஆர்பிசி இருக்கும். முன்னதாக லாட்ஜி (Renault Lodgy) என்ற எம்பிவி ரக காரை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், ரெனால்ட் ஆர்பிசி கார், மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரெனால்ட் ஆர்பிசி கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் சோதனை செய்யப்பட்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவின. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில், பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பது தெரியவருகிறது.
ரெனால்ட் ஆர்பிசி காரானது, சப்-4 மீட்டர் எம்பிவி ரகத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. அதாவது ரெனால்ட் ஆர்பிசி காரின் நீளம் 4 மீட்டருக்கு உட்பட்டதாகதான் இருக்கும். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி குறையும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைவான விலையில் காரை வழங்க முடியும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில், ரெனால்ட் ஆர்பிசி காரின் விலை வெறும் ரூ.4.5 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களை இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி எர்டிகாதான் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கு மிக முக்கியமான காரணம் மாருதி சுஸுகி எர்டிகாவின் மலிவான விலைதான். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 7.44 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. ஆனால் ரெனால்ட் ஆர்பிசி காரானது, அதை விட மிக மிக குறைவான விலையில், அதாவது சுமார் 4.5 லட்ச ரூபாய் அளவில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ரெனால்ட் ஆர்பிசி ரூபத்தில், மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது. அதிகம் பேர் பயணிக்க கூடிய வகையிலான 7 சீட்டர் எம்பிவி ரக காரை மலிவான விலையில் எதிர்பார்ப்பவர்களுக்கு, ரெனால்ட் ஆர்பிசி நல்ல தேர்வாக இருக்கும். ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் ட்யூயல் ஏர் பேக்குகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ரெனால்ட் ஆர்பிசி கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அனேகமாக வரும் ஜூலை மாதம் ரெனால்ட் ஆர்பிசி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான வெங்கட்ராம், தங்களது நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ET Auto தளத்திற்கு பேட்டியளித்தார். இதில், வரும் ஜூலை மாதம் ஒரு புதிய கார் அறிமுகமாக உள்ளதாக வெங்கட்ராம் தெரிவித்தார். அனேகமாக அது ரெனால்ட் ஆர்பிசியாகதான் இருக்கும் என கூறப்படுகிறது. ஜூலைக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!