Just In
- 1 hr ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலீசார்-ஆர்டிஓ அதிகாரிகள் கூட்டணி... வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைய காரணம் இதுதான்...
போலீசார்-ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் கூட்டணியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து நிற்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டேவும் செல்கிறது.
போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே தவறு செய்யும் வாகன ஓட்டிகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இ-சலான்களை வினியோகித்து வருகின்றனர்.
இதற்கு உண்டான அபராத தொகையை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை போல் இதையும் பின்பற்றுவது கிடையாது. இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசாரால் வழங்கப்பட்ட இ-சலான்களுக்கு அபராத தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வாகன ஓட்டிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அகமதாபாத் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தவறு செய்த வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அபராதத்தை செலுத்த தவறிய வாகன ஓட்டிகளால், பெயர் மாற்றம் உள்பட ஆர்டிஓ அலுவலகம் சார்ந்த எந்த பணிகளையும் செய்ய முடியாது.
அத்துடன் அபராத தொகையை செலுத்தாத வரை டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கவும் முடியாது. அதே சமயம் முதல் முறை அபராதத்தை செலுத்தி விட்டு மீண்டும் அதே தவறை செய்தாலும் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியாது. இதுகுறித்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ''அபராதம் செலுத்த தவறிய வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், வாகன பதிவை ஏன் ரத்து செய்ய கூடாது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி விட்டு அபராதம் செலுத்தாமல் உள்ள வாகன ஓட்டிகளுக்கு நாங்கள் எவ்வித தடையில்லா சான்றையும் வழங்கப்போவதில்லை. அத்துடன் வாகன பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்படாது'' என்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சாலைகள் நாளுக்கு நாள் மிகவும் அபாயகரமானவையாக மாறி வருகின்றன. வாகன ஓட்டிகளின் அலட்சியம் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு பொறுப்புணர்வு வர வேண்டுமென்றால், இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதே பலரின் எண்ணமாகவும் உள்ளது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!