Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 6 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய வருகை விபரம்!
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு ஸ்கோடா கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த கரோக் எஸ்யூவி களமிறக்ககப்பட்டது. பல வெளிநாடுகளில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
இந்த சூழலில், புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் உற்பத்தியும் இந்தியாவில் துவங்கி விட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா கார் ஆலையில் புதிய கரோக் எஸ்யூவியின் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கோடியாக் எஸ்யூவியின் கட்டுமானக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய மாடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது 4,382 மிமீ நீளமும், 1,814 மிமீ அகலமும், 1,605 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,638 மிமீ ஆக உள்ளது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் 521 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை மடக்கினால் 1,810 லிட்டர் வரை பூட்ரூம் இடவசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஸ்கோடா நிறுவனத்தின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் ரிஃப்ளெக்டர் அமைப்புடன் கூடிய பின்புற பம்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...