Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!
ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு விலையில் ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் விளங்குகிறது. ஆனால், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, இந்த காரின் விற்பனை எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளது.
இந்த நிலையில், ஸ்கோடா ரேபிட் காரின் மதிப்பை கூட்டும் விதத்தில், ரூ.1.58 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் சில வேரியண்ட்டுகளின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 30ந் தேதி வரை இந்த தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விலையில் கிடைக்கும்.
ஸ்கோடா ரேபிட் டீசல் மாடலுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் ஆக்டிவ் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.10.06 லட்சத்தில் கிடைத்து வந்தது. தற்போது ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரூ.1.06 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டினஅ மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.11.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இனி ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.30 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் டீசல் ஸ்டைல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் ரூ.11.16 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிகபட்சமாக ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டின் ஆட்டோமேட்டிக் மாடலானது ரூ.12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி ரூ.11.36 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோன்று, ஸ்டைல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.14 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட் ரூ.12.44 லட்சத்தில் கிடைக்கிறது. ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.
ஸ்கோடா ரேபிட் காரில் 110பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வர இருக்கின்றன.
இதற்கு தக்கவாறு இந்த டீசல் எஞ்சினை மேம்படுத்தும் நிலை இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு மேம்படுத்துவதற்கான திட்டம் ஸ்கோடா ஆட்டோ வசம் இல்லை. எனவே, இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ரேபிட் கார் அடுத்த சில மாதங்களில் விற்பனையில் இருந்து நீக்கப்பட இருக்கிறது. எனவேதான், இருப்பு இருக்கும் கார்களை விற்றுத் தீர்ப்பதற்கு அதிகபட்ச தள்ளுபடிகளை ஸ்கோடா அறிவித்துள்ளதாக தெரிகிறது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?