Just In
- 3 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 3 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 4 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 6 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!
ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு விலையில் ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் விளங்குகிறது. ஆனால், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, இந்த காரின் விற்பனை எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளது.

இந்த நிலையில், ஸ்கோடா ரேபிட் காரின் மதிப்பை கூட்டும் விதத்தில், ரூ.1.58 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் சில வேரியண்ட்டுகளின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 30ந் தேதி வரை இந்த தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விலையில் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் டீசல் மாடலுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் ஆக்டிவ் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.10.06 லட்சத்தில் கிடைத்து வந்தது. தற்போது ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரூ.1.06 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டினஅ மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.11.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இனி ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.30 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிட் டீசல் ஸ்டைல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் ரூ.11.16 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிகபட்சமாக ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டின் ஆட்டோமேட்டிக் மாடலானது ரூ.12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி ரூ.11.36 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதேபோன்று, ஸ்டைல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.14 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட் ரூ.12.44 லட்சத்தில் கிடைக்கிறது. ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.
MOST READ: குண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி!

ஸ்கோடா ரேபிட் காரில் 110பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வர இருக்கின்றன.

இதற்கு தக்கவாறு இந்த டீசல் எஞ்சினை மேம்படுத்தும் நிலை இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு மேம்படுத்துவதற்கான திட்டம் ஸ்கோடா ஆட்டோ வசம் இல்லை. எனவே, இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ரேபிட் கார் அடுத்த சில மாதங்களில் விற்பனையில் இருந்து நீக்கப்பட இருக்கிறது. எனவேதான், இருப்பு இருக்கும் கார்களை விற்றுத் தீர்ப்பதற்கு அதிகபட்ச தள்ளுபடிகளை ஸ்கோடா அறிவித்துள்ளதாக தெரிகிறது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் செடான் பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க் மற்றும் சேவை தரத்தில் உள்ள குறைபாடுகளால் போதிய விற்பனையை பெற முடியாமல் திணறி வருகிறது.

சிறந்த கார் மாடலாக இருந்தாலும் விற்பனையில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் புதிய வர்த்தக கொள்கைகளை செயல்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதன்படி, பல புதிய கார் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த பட்டியலில் புதிய ஸ்கோடா ரேபிட் செடான் காரும் உள்ளது.

தற்போது உருவாக்கப்ப பணிகளில் இருக்கும் இந்த புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் காரின் உருவரை படம் ஒன்று அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், புதிய ரேபிட் கார் டிசைன் முற்றிலும் புதிய முறையில் மாற இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. வழக்கம்போல் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் முற்றிலும் புதிய தோற்றத்தில் ரேபிட் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

புதிய தலைமுறை சூப்பர்ப் காரின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய ரேபிட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதை இந்த உருவரை படம் மூலமாக தெரிகிறது. புதிய எல்இடி ஹெட்லைட் , க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், கூரை அமைப்பு என அசத்துகிறது. ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் கார் அடுத்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.