Just In
- 57 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 58 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் ஒரே நிறுவனமாகிறது!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் மூன்று நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாற்றப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஆடி, போர்ஷே, புகாட்டி, ஸ்கோடா ஆட்டோ உள்ளிட்ட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் அங்கமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பல கார் பிராண்டுகள் தனித்தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய வர்த்தகத்தை செம்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையில் எடுத்துள்ளது.
அதன்படி, புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் நிர்வாகத்தையும், புதிய கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, தனது கீழ் இந்தியாவில் செயல்படும் மூன்று நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் குழுமம்.
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் ஃபோக்ஸ்வேகன் இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களையும் இணைந்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Skoda Auto VW India Private Limited) என்ற பெயரில் ஒரே நிறுவனமாக மாற்ற இருக்கிறது.
எளிமையான நிர்வாக கட்டமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கையின் மூலமாக இந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் கையில் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் ஒரே நிறுவனமாக மாற்றப்பட இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தனது கூட்டணியாக செயல்படும் டீலர்கள், உதிரிபாக சப்ளையர்களிடம் இந்த தகவலை அந்நிறுவனம் முறைப்படி தெரிவித்துள்ளது. கடந்த 5ந் தேதி இந்த தகவலை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வெளியிட்ட நிலையில், வரும் 21ந் தேதிக்குள் முறைப்படி இந்த புதிய நிறுவனத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கான நடைமுறைகள் செய்து முடிக்கப்பட இருக்கின்றன.
ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்களுக்கான சட்ட தீர்ப்பாயமும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த புதிய நிறுவனத்தின் மூலமாக சிறந்த நிர்வாக மேலாண்மை மூலமாக இந்திய வர்த்தகக் கொள்கைகளில் விரைந்து இறுதி முடிவு எடுக்க முடியும். அத்துடன் புதிய கார்களை தயாரிப்பதற்கான முதலீடுகள், நிர்வாக செலவுகள் வெகுவாக குறையும்.
இதன்மூலமாக, இந்தியாவில் அதிகபட்சமான வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான சிறந்த திட்டமாக இதனை ஃபோக்ஸ்வேகன் கருதுகிறது. புரொஜெக்ட் 2.0 திட்டடத்தின் மூலமாக பல புதிய எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் பிராண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்த புதிய நடவடிக்கை மூலமாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்திய வர்த்தகம் புதிய பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முடிவுகள் விரைந்து எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!